அறுசுவைஇலங்கை சமையல்

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

இட்லி தயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

idlivadai

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும், அரைக்கும் போது உப்பு, பெருங்காயத்தூள் கலக்கவும்.

அரைத்தெடுத்த மாக்கலவையை 7-8 மணி நேரம் புளித்துப்போக (தோசைக்கு வைப்பதுபோல் பொங்க) வைக்கவும்.

பொங்கிய மாக்கலவையுள் மிளகு தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

மாக் கலவை தோசைக்கலவை போல் இளகியதாக இராது கொஞ்சம் இறுக்கமாக இருத்தல் வேண்டும். அதன்பின்;

எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் உள்ள குண்டுகளில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி இடியப்பம், பிட்டு அவிய வைப்பது போல் இட்லிச் சட்டியில் வைத்து மூடி; ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை அவிய விடவும்.

இட்லி அவிந்ததும் இட்லித் தட்டை வெளியே எடுத்து அதன் மேல் கொஞ்ச தண்ணீர் தெளித்தபின் இட்லியை ஒவ்வொன்றாக எடுக்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button