முகப் பராமரிப்பு

தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.

தினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்த்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

இன்றைய காலகட்டத்தில் அழகின் மீது அக்கறை காட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பெண்களே அதிகளவில் அக்கறை காட்டுகின்றனர். அதுவும் செயற்கை வழியில் செல்லாமல் இயற்கை வழியை நாடுகின்றனர். இதற்காக வீட்டில் இருக்கும் காய்கறிகளை கொண்டு எப்படி அழகாக மாறுவது என்ற எண்ணம் உண்டாகத் தொடங்கியுள்ளது.pic

அப்படி வீட்டில் இருக்கும் பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியில் உள்ள அமிலத் தன்மை மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சனைகளிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கிறது.

தக்காளியால் கிடைக்கும் நன்மைகள்:

முகப்பரு பிரச்சனைக்கு தக்காளி ஒரு நல்ல இயற்கை மருந்தாகும், இதற்கு தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம்.

முகப்பரு பள்ளம் சுருங்கும்.

சிலருக்கு சருமத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கும். அதாவது முகப்பரு உண்டான இடத்தை கிள்ளி எடுக்கும் போது அந்தப்பகுதி பள்ளமாக இருக்கும். இதற்கு தக்காளி சிறந்த மருந்தாகும். அந்த இடத்தில், தக்காளியை சிறு துண்டுகளாக்கி பள்ளமாக இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வேண்டும். அப்படி செய்து வந்தால், பள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கும்.

சருமக் கருமைகள் நீங்க:

வெயிலின் தாக்கம் காரணமாக சருமம் கருப்படைந்து காணப்படும். இதற்கு இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் தக்காளி துண்டால் தடவி வந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். இப்படி செய்தால் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமைகள் அகலும்.

பொலிவான முகம்:

முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை சிறிது துண்டாக்கி அதனை தேனில் நனைத்து முகத்தில் தேய்த்து விட வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிய பிறகு பார்த்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

எண்ணெய் பசை நீங்க:

ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இதனை போக்க செயற்கை முறையில் கிடைக்கும் மருந்துப் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையில் கிடைக்கும் தக்காளியே சிறந்தது. எண்ணெய் பசை நீங்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும் என்பதை நீங்கலே அறியலாம்.

தக்காளி பேஸ்வாஷ்:

தினமும் காலையில் வெளியில் சென்று பின் மாலையில் வீட்டிற்கு வரும் போது முகத்தில் ஏகப்பட்ட அழுக்குகள் நிறைந்திருக்கும். அதற்கு நாம் சோப் பயன்படுத்துவோம். ஆனால், அப்படி செய்யும் போது நம் முகத்தில் அழுக்குகள் இருந்துகொண்டே தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக வீட்டிற்கு வந்ததும், சோப் பயன்படுத்தாமல், ஒரு டேபிள் ஸ்பூன் தக்காளி சூசுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்கும்.

தக்காளி பேஸ்பேக்:

தக்காளியை கொண்டு பேஸ்பேக் போட நினைத்தால் தக்காளி சாறுடன் சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்ந்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தின் அழகு மேம்பட்டிருக்கும் என்பதை உணரலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button