​பொதுவானவை

கணவன் எரிச்சலடையும் மனைவியின் சில செயல்கள்

 

கணவன் எரிச்சலடையும் மனைவியின் சில செயல்கள் மனைவி செய்யும் சில செயல்கள் கணவருக்கு பிடிப்பதில்லை. இந்த செயல்களால் தான் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுவதும், இதனால் கருத்து வேறுபாடுகள் ஏற்படவும் தொடங்குகிறது. பெண்களின் பல செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும் அதிக எரிச்சலைத்தரக்கூடியவை சில உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்..

1. சின்ன விஷயத்திற்கெல்லாம் கணவனை துணைக்கு அழைப்பது

2. ஏதோ சொல்ல வந்து பின் ‘அதை விடுங்க’ என பொடி வைத்து பேசுவது. மூடி மறைத்து கணவனை உஷ்ணபடுத்துவது.

3. ‘அன்பு’ என்ற பெயரில் ஆயிரம் ‘போன்கால்’ பண்ணி நச்சரிப்பது.

4. எதற்கெடுத்தாலும் அழுது வடிவது. அழும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது. ஆனால் பெண்கள் காரணம் சாதிக்க அழுது நடிப்பார்கள்.

5. ‘இவங்க தப்பா நினைப்பாங்க அவங்க தப்பா நினைப்பாங்க’ என்று தனக்காக வாழாமல் சமூகத்திற்கு பயந்து பயந்து வாழ்வது.

6. சாப்பிடும் நேரம் பார்த்து குடும்ப பிரச்சினைகளை கிளறுவது. நமக்காக இரவில் சாப்பிடாமல் காத்து கொண்டிருப்பது .

7. வீட்டை அலங்கோலமாக போட்டு வைப்பது.

8. நண்பர்களை பற்றி தவறாக பேசுவது.

9. வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் ‘ரூல்ஸ்’ போடுவது.

10. எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்பது.

11. கணவன் வேலை முடிந்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது சொர்ணாக்கா ரேஞ்சுல முகத்தை வைச்சுக்கிட்டு பேசுவது…

12. எப்ப பாத்தாலும் நான் அழகாயில்லையாங்கன்னு கேட்டு நச்சரிச்சு அடிக்கடி கணவனைப் பொய் சொல்ல கட்டாயப்படுத்துவது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button