ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா செம்பருத்திப்பூவில் தங்கச்சத்து உள்ளது…

செம்பருத்திப்பூ பூவின் மொத்த எடையில் 40_ல் ஒரு பாகம் தங்கச்சத்து உள்ளது. செம்பருத்திப்பூக்களைப் பக்குவப்படுத்தி சாப்பிட்டால், தங்கச்சத்தின் பலனைப் பெறமுடியும்.

download 1

செம்பருத்திப்பூ உஷ்ண நிவாரணி. கல்லீரல், இருதயம், மூத்திரப்பை வியாதிக்கும் கணைச்சூடு, எலும்புருக்கி, மேகக்காங்கை, வெள்ளை, வெட்டை, ரத்தப் பிரமியம், நீர்க்கடுப்பு, எரிச்சல், கல்லீரல் வீக்கம் முதலியவற்றிற்குச் சிறப்பான நிவாரணியாகும். ஐந்து செம்பருத்திப் பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால், காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.

செம்பருத்திப்பூக்களை நூறு எண்ணிக்கையில் சேகரித்து 1,250 மில்லி நீரில் போட்டுக் காய்ச்சி 500 மில்லியாக வந்ததும் வடிகட்டி இதில் ஒரு கிலோ சீனி சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி பால் அல்லது வெந்நீரில் கலந்து 40_50 தினங்கள் கொடுத்தால், குழந்தைகளின் கணைச்சூடு நிரந்தரமாகக் குணமாகும்.

நவீன மருத்துவத்தில் கணைச்சூட்டை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது. சயரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சர்பத்தைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டால் சயரோகம் முழுமையாக நிவர்த்தியாகும். கல்லீரல், இருதய நோய்கள் குணமாகும்.ஒரு கைப்பிடியளவு பூக்களை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்கும் வெந்நீர் இரண்டு டம்ளர் விட்டு, மூடிவைக்க வேண்டும். பத்து நிமிஷங்கள் சென்றபின் எடுத்து வடிகட்டி பால், சர்க்கரை தேவைக்குச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் உபயோகித்து வந்தால், கணைச்சூடு நீங்கும். கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். ரத்தசோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயல்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும்.

வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்க பூக்களைச் சேகரித்து அரைத்து ஒரு எலுமிச்சங்காய் அளவில் எடுத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன், மூன்று தினங்கள் சாப்பிட்டால் குணமாகும். செம்பருத்திப்பூக்களின் மத்தியில் உள்ள மகரந்தக் காம்புகளைச் சேகரித்து, இதில் உள்ள மகரந்தப் பொடியை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி பொடியைப் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். ஆண் தன்மை அதிக வலிமை பெறும்.

செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லி தண்ணீரில் போட்டு நன்றாக ஊறும்படி வைத்திருக்கவேண்டும். நன்றாக ஊறியபின் இந்த நீரைக் குடித்து வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் உடனே நிவர்த்தியாகும். செம்பருத்திப்பூ இதழ்களைச் சேகரித்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்து, ஒரு கிலோ அளவிற்கு ஒரு ஜாடியில் போட்டு, இதில் கால் கிலோ தேன் சேர்த்து 5 கிராம் Êஏலப்பொடியையும் இதில் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடி வைக்கவேண்டும். பத்து தினங்கள் ஊறியபின் ஒருநாள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துப் பயன்படுத்தவேண்டும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு, எலும்புருக்கி, கல்லீரல் வீக்கம், மேகக் காங்கை, இருதய பலவீனம் நீங்கும்.

செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும். பெண்களுக்கு கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும். சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும். சில பெண்கள் வெள்ளைப் படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். தலைமுடி நீண்டு வளர சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும். செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும். நீர் சுருக்கு நீங்க நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது. செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்து, அம்மியில் வைத்து மைய அரைத்து, அரைநெல்லிக்காயளவு உருண்டையாக உருட்டி, பாலுடன் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 5 நாட்கள் உட்கொண்டு வர தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும். செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்கள் அரை கைப்பிடி, சீரகம்-1 கிராம், நெல்லிவற்றல்-1 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தி வர அதிக உடல் உஷ்ணம் தணியும், செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைசூடு தணியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button