ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

கொஞ்சம் கூட சாப்பிடமால் வெறும் வயிற்றில் இருக்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது.

*பொதுவாக நீங்கள் வெறும் வயிற்றில் இருக்கும்போது மருந்துகளை சாப்பிடக்கூடாது. அதிலும் குறிப்பாக அண்டி- இன்ஃபிலாமேட்ரி மருந்துகளை எடுக்கவே கூடாது. ஒருவேளை முன்னர் உணவு பரிந்துரைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி சரிபார்க்கவும்.

*நீங்கள் தூங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவை முடித்திருக்க வேண்டும். அதற்காக மீண்டும் பசியெடுத்தால் நீங்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.எனவே தூங்கபோகும் முன் ஒரு கிளாஸ் பால் அல்லது ஆப்பிளை சாப்பிடலாம்.

*வெறும் வயிற்றில் மது குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். இவ்வாறு செய்வதால் ஆல்கஹால் உங்கள் உடலில் அதிகளவில் கலந்து, இதயம், கல்லீரம் மற்றும் சிறுநீரகத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

*வெறும் வயிற்றில் இருக்கும்போது நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்காது. இதனால் பின்னாட்களில் நீங்கள் கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள். எனவே வெறும் வயிற்றில் இருக்கும்போது முடிவு எடுப்பதே தவிருங்கள்.

*வெறும் வயிற்றில் இருக்கும்போது உங்களது உடம்பு குறைவான சக்தியை உணருகிறது. எனவே அப்போது நீங்கள் உடற்பயிற்சி செய்வது மேலும் உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். இதனால், உங்களின் அதிகபட்ச இலக்கினை அடைய முடியாது.

*பசிவெறியுடன் இருக்கும்போது நீங்கள் சரியான மனநிலையில் இருக்கமாட்டீர்கள். எனவே அந்தநேரத்தில் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

*நீங்கள் பசியுடன் இருக்கும்போது வாக்குக் கொடுத்தல், பேரம் பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த சமயம் உங்கள் உடலில் குறைவான சக்தியே இருக்கும். அதனால் உங்களால் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது.

*வெறும் வயிற்றில் இருக்கும்போது மளிகைபொருட்களை வாங்கச் செல்வது மிகப்பெரிய தவறு. ஏனென்றால் ஆரோக்கியமான உணவுபொருட்களை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் ஆரோக்கியமற்ற பொருட்களை எடுத்து பிழை செய்து விடுவீர்கள்.

*வெறும் வயிற்றில் சுவிங்கம் சாப்பிடுவது, வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல் 10-15 நிமிடங்களுக்கு மேல் சுவிங்கத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

*வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது நல்லதல்ல. இது இதயத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு செரிமான பிரச்சனைகளையும் உண்டாக்கும். காலை உணவை தவிர்த்து, காஃபி மட்டும் அருந்தும் மக்களுக்கு இதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும்

d 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button