உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா
கற்றாழையை உதட்டிற்கு மேலே தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து வந்தால், உதட்டிற்கு மேலே இருக்கும் கருமையை எளிதில் போக்கலாம்.
வெள்ளரிக்காயின் சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் இருக்கும் கருமையான இடத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சில நாட்களிலேயே அதனை போக்கலாம்
எலுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் தயிர் கலந்து, கருப்பான இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சரும நோய்கள் போவதோடு, சருமமும் எண்ணெய் பசையுடன் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.