அறுசுவைஆரோக்கிய உணவுஆரோக்கியம்சமையல் குறிப்புகள்

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

தேவையான பொருட்கள் :
Untitled design5
பசலைக் கீரை – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
அரிசி – 1 1/2 கப்
பருப்பு – 1 கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை  :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும்.

இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 10 முதல் 12 நிமிடங்கள் வரை நன்கு வேக வைக்கவும்.

இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பசலைக் கீரை கிச்சடி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button