ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சிறு தவறுகளால் சில நேரங்களில் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள்…

தினந்தோறும் நாம் செய்யும் கடமைகளில் மிகவும் முக்கியமானது குளித்தல். குளிப்பதனால் மனம் மற்றும் உடல் புத்துணர்ச்சி மற்றும் ஆறுதல் பெறுகின்றது. ஆனால் நீங்கள் கவனக் குறைவால் குளிக்கும் போது நீங்கள் சில தவறுகளை செய்கிறீர்களா?

இந்த சிறு தவறுகளால் சில நேரங்களில் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை நீங்கள் அறிந்து கொண்டு மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் இருப்பது அவசியமானது.

குளிக்கும் போது செய்யும் சில தவறுகள்.

shampoo1

1. நீண்ட நேரம் சவரின் கீழ் நிற்றல்.
நீண்ட நேரம் சவரின் கீழ் நின்று குளிப்பது பலருக்கும் பிடிக்கும். ஆனால் இதனால் ஆரோக்கியத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுவதனால் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.

2. சூடான நீரில் குளித்தல்.
சூடான நீரில் குளிப்பதனால் சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய்த் தன்மை வெளியேறி விடுகிறது. அதனால் சருமம் உலர்வடைந்து, கடிகள் ஏற்படும் . எனவே குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்தது.

3. அதிகமான சோப்பை பயன்படுத்தல்.
சோப்பை பயன்படுத்துவதனால் அதிக நறுமணத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம். ஆனால் இரசாயணப் பொருட்கள் நிறைந்த சோப்பை அதிகம் பயன்படுத்துவதனால் சருமத்தின் pH பேணமுடியாது. எனவே இயற்கையாக தயாரிக்கப்பட்ட சோப்பை குறைந்தளவில் பயன்படுத்துவது சிறந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button