பளபளப்பான அழகான முகத்தை பெற கிரீன் டீயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…
நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இயற்கையான ஆரோக்கிய மூலிகைள், நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல நமக்கு கூடுதல் அழகையும் கொடுக்கிறது. இதனை இங்கு சுருக்கமாக காண்போம். பருவ வயதில் எட்டும் பெண்களுக்கு பெரும் பிரச்சி னையாக இருப்பது முகத்தில் பருக்கள் தோன்றுவதும், சிலருக்கு எண்ணெய் பிசுபிசுப்புதான். இதனால் அவர்களின் அழகு முற்றிலும் பாதிக்கப்படுவதாக எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அந்த இளம் வயதில் முகத்தில் தோன்றும் பருக்கள் மிகுந்த வலியை உண்டக்கும். முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அவர்கள் கிரீன் டீயை முகத்திற்கு, 60 நாட்கள் வரை தொடர்ச்சியாக தினந்தோறும் அப்ளை செய்து வந்தால் அவர்களின் முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையும் மறையும் மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவதற்கான காரணிகளையும் இது அடியோடு நீக்கி விடுகிறது. இதனால் அவர்கள் முகம், எண்ணெய் பசையற்ற, பருக்கள் அற்ற அழகு முகம் பளிச்சிடும்.