அழகு குறிப்புகள்முகப்பரு

பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க உதவும் வேறு சில இயற்கை வழிகள்!….

பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இப்போது பருக்களால் வந்த தழும்புகளைப் போக்க உதவும் வேறு சில இயற்கை வழிகளையும் காண்போம்.

புதினா

புதினாவை அரைத்து பேஸ்ட் செய்து, பருக்கள் மற்றும் பருக்கள் விட்டு சென்ற தழும்புகளின் மீது தினமும் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவி வர, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தழும்புகள் மற்றும் பருக்களை மாயமாய் மறையச் செய்துவிடும்.

puthina

தக்காளி

தக்காளியை வெட்டி, அதைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள பருத் தழும்புகளை மறையச் செய்யலாம்.

வெள்ளரிக்காய் சாறு

வெள்ளரிக்காய் சாறு மிகச்சிறந்த டோனர். இது சருமத்தின் அழகையும், பொலிவையும் மேம்படுத்தும். முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறையச் செய்வதற்கு வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது அதன் சாற்றினையோ, தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என தினமும் செய்து வந்தால், விரைவில் தழும்புகளைப் போக்கலாம்.

சந்தனம்

ஒரு பௌலில் சந்தன பவுடரை எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் இரவில் படுக்கும் முன் இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகளை மறைவதைக் காணலாம். முக்கியமாக இச்செயலால் சருமத்தின் நிறமும் மேம்படும். எனவே தவறாமல் இந்த வழியைப் பின்பற்றிப் பாருங்கள்.

முட்டை வெள்ளைக் கரு

முட்டையின் வெள்ளைக்கருவை இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள். இதனால் முட்டையில் உள்ள புரோட்டீன், பாதிக்கப்பட்ட சரும செல்களை விரைவில் சரிசெய்துவிடுவதோடு, தழும்புகளையும் மறையச் செய்யும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு, புதிய செல்களும் உருவாகும். முக்கியமாக பருக்களால் வந்த தழும்புகள் போய்விடும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலும் முகப்பருக்களால் வந்த தழும்புகளை மறையச் செய்யும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், எப்பேற்பட்ட சரும பிரச்சனைகளையும் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button