அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

காலை சருமபராமரிப்பு செயல்முறை!…

ஒவ்வொரு பெண்ணும் அவருடைய சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் பிரகாசமாகவும் இருக்க விரும்புவர். இதை உறுதி செய்ய, ஒரு சரியான சருமபராமரிப்பு செயல்முறை-காலை மற்றும் இரவு என இரண்டு நேரங்களிலும் பெண்களுக்கு மிகவும் முக்கியம். சருமபராமரிப்பு என்று வரும்போது, இயற்கையான பொருட்களை எதுவும் அடித்துக்கொள்ள முடியாது.

ஒரு காலை சருமபராமரிப்பு செயல்முறை கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ட்டரைசிங் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவை ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பயன்படுத்தகூடிய இயற்கையான பொருட்கள் இவைதான்.

கிளென்சிங்

முதலில், தினசரி நீங்கள் முகத்தை கழுவ உங்கள் சருமத்திற்கு சிறப்பாக பொருந்துமாறு இருப்பதை பயன்படுத்துங்கள். எனினும், வாரத்தில் ஒன்று அல்லது இரண்டுமுறை, உங்கள் சருமம் தளர வைக்க குறித்துக் கொள்ளுங்கள். அதற்கு பயன்பட இங்கே ஒரு சில இயற்கை பொருட்கள்:

 

1) சக்கரை

சக்கரை பெரும்பாலான முக பூச்சிற்கு அடித்தளமாக இருக்கிறது. சக்கரை உங்கள் சருமம் தளரவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது, அது இயற்கையாக நாள் முழுவதும் புதியதாக வைக்கும்.

ஒரு தளரும் பூச்சை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். நான்கு எலுமிச்சை பழங்களின் சாரைப்பிழிந்து, இரண்டு தேக்கரண்டி சக்கரை சேர்த்து மேலும் நன்றாக அதை கலக்கவும்.

இப்போது, முகப்பூச்சை எடுத்து மேலும் சக்கரை துகள்கள் கரையும்வரை உங்கள் முகத்தில் மெதுவாக அதை மசாஜ் செய்யவும்.

இதற்குப்பின், தண்ணீரில் முகத்தை கழுவுங்கள் மேலும் நீங்கள் இப்போது வெளியே செல்வதற்கு நான்றாக இருக்கிறீர்கள்!

face2

 

2) புல்லர்ஸ் எர்த் (முல்தானி மிட்டி)

புல்லர்ஸ் எர்த், அல்லது பொதுவாக முல்தானி மிட்டி என்று அழைக்கப்படுவது, சருமத்திற்கு மிகவும் நல்லது. முல்தானி மிட்டி சருமத்தில் இருக்கும் மிகுதியான எண்ணையை நீக்குகிறது மேலும் சருமத்தில் இருக்கும் அழுக்கு, வியர்வை மற்றும் அசுத்தங்களை நீக்கி ஆழமாக சுத்தம்செய்கிறது. இயற்கையிலேயே கிருமி நாசினியான முல்தானி மிட்டி கருமுள் மற்றும் முகப்பருக்களை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

முல்தானி மிட்டியை ரோஸ் வாட்டர், கிலிசெரின் அல்லது பால் ஆகியவற்றை கலந்து அதை உங்கள் முகத்தில் தடவுங்கள். இந்த பூச்சு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் அதை கழுவவும் மேலும் உங்கள் சருமத்தை தட்டி உலரத்துங்கள்.

டோனிங்

உங்கள் முகத்தில் ஈரமூட்டியை தடவுவதற்கு முன், உங்கள் முகத் தொனியை(டோன்) உருவாக்க குறித்துக்கொள்ளுங்கள். இதற்காக உங்களுக்கு உதவும் இயற்கையான பொருட்களை கீழே காணலாம்:

1) ரோஜா தண்ணீர்

காட்டன் பந்துகளை ரோஜா தண்ணீரில் முக்கவும் மேலும் உங்கள் சருமத்தில் அதை மெதுவாக தடவவும். ரோஜா தண்ணீர் ஒரு இயற்கை தொனி ஊக்கி மேலும் உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை தரும். ரோஜா தண்ணீர் சருமத்தின் பிஎச் சமநிலையை நிர்வகிக்க உதவும் மற்றும் மிகையான எண்ணெய்யை கட்டுப்படுத்தும். ரோஜா தண்ணீர்

ஆன்டி-அழற்சி மற்றும் கிருமி நாசினியாக இருப்பதால், சரும சிவப்புத்தன்மை, சரும அழற்சி ஆகியவற்றை குறைக்கவும் மற்றும் பருக்களை தடுக்கவும்கூட அது உதவுகிறது. சருமத்தை நீரோட்டமாகவும்

மற்றும் ஈரப்பதமாகவும்கூட ரோஜா தண்ணீர் வைக்கிறது, அது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியாகவும் மற்றும் உயிர்பிக்கவும் உதவுகிறது.

2) கற்றாழை (அலோ வேரா) ஜெல்

சரும பராமரிப்பு என்று வரும்போது புதிய கற்றாழையை அடித்துக்கொள்ள எதுவும் இல்லை! கற்றாழையை, ‘அழிவில்லாத தாவரம்’ என்று அதிகமாக குறிப்பிடப்படுகிறது, அது உடையும்போது ஒரு தெளிந்த ஜெல்லை சுரக்கிறது. இந்த ஜெல் உங்கள் சருமத்தில் நேரடியாக உபயோகிக்கலாம்.

கற்றாழை உங்கள் சருமத்தை பிசுக்கு ஆக்காமல், ஈரமாக்குகிறது. கற்றாழை ஜெல் ஒரு இனிமையான தன்மையை சருமத்தின் மீது தருகிறது மேலும் சரும அழற்சி மற்றும் பருக்களுக்கு சிகுச்சை அளிக்க உதவுகிறது. மேலும் அது புண்களையும் மற்றும் தீக்காயங்களையும் குணப்படுத்தவும் உதவுகிறது.

3) பச்சை பால்

பச்சை பால் சருமத்திற்கு மிகவும் நல்லது. ஒரு பஞ்சு பந்தை பச்சை பாலில் முக்கி பின் உங்கள் முகம் முழுவதும் அதை ஒத்தி எடுக்கவும்.

ஒரு புதிய பஞ்சு பந்தை பயன்படுத்தி, உங்கள் சருமத்தில் ஒரு வட்ட வடிவத்தில் துடைக்கவும். உங்கள் முகத்தில் இருந்து எத்தனை அழுக்குகள் உண்மையில் துடைத்து எடுக்கப்படுகிறது என்று நீங்கள் பார்த்தால் வியப்படைவீர்கள்!

மாய்ஸ்ட்டரைசிங்

உங்கள் சருமத்தை கிளென்சிங் மற்றும் டோனிங் செய்த பின், சருமம் நாள் முழுவதும் நன்கு நீரேற்றமாகவும் மற்றும் ஈரப்பதமாகவும் இருப்பதாய் உறுதி செய்ய அதை மாய்ஸ்ட்டரைசிங் செய்வது முக்கியம். இந்த இடத்தில் கீழே குறிப்பிட்டுள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள்:

1) தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் முடிக்கு சிறந்தது மட்டுமன்றி, மேலும் அது சருமத்திற்கும்கூட சிறந்ததாகும்!

சரும செல்களை சரி செய்யவும் மற்றும் மீட்டெடுக்கவும் தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. எண்ணெய் உங்கள் முகம் பிசுபிசுப்பாக்காமல், எளிதாக சருமத்தின் ஆணிவேருக்குள் உறிஞ்சப்படுகிறது. அது சரும ஈரப்பதத்தில் மாட்டிக்கொண்டு மேலும் சருமத்தின் இயற்கையான பழுது பார்க்கும் செயல்பாட்டு வேலியை உறுதிபடுத்துகிறது.

2) பால் கிரீம் (மலாய்)

எல்லா சரும இன்னல்களுக்கும் மற்றும் பிரச்சனைகளுக்கும் மலாய் மிகவும் பயனுள்ள தீர்வாக நம்பப்படுகிறது. அது வறண்ட, கிழிந்த அல்லது மந்தமான சருமமாக இருக்கட்டும்-இப்படி எல்லா வகையான சருமத்திற்கும் மலாய் ஒரு சிறந்த வீட்டு தீர்வாகும்!

மலாய் ஒரு இயற்கை தோல் வெளியேற்றியாக செயல்படுகிறது மற்றும் இறந்த தோல் செல்களை நீக்கவும் உதவுகிறது. மலாயை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள் பிறகு அதை கழுவி எடுக்கவும். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்து மேலும் அதை, குறிப்பாக குளிர் காலங்களில் வறண்டு போகாமல் இருக்கவும் பாதுகாக்கிறது.

3) பசு நெய்

சருமத்திற்கு சுத்தமான பசு நெய் ஒரு இயற்கையான ஊட்டச்சத்து தரும் பொருள். நெய் உங்கள் சருமம் மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் ஆக்குகிறது.

அது உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஊட்டம் அளிப்பதால், சருமத்திற்கு நெய் ஒரு நல்ல ஈரப்பதம் கொடுக்கும் பொருள் மற்றும் வெவ்வேறு வகையான சருமங்களுக்கும் மிகவும் பொருத்தமானது. நெய்யில் கொழுப்பு அமிலம் இருக்கிறது அது தோல் செல்களை நீரேற்றமாக இருக்க உதவுகிறது. இந்த பொருளும் சருமத்தில் முதுமை அடையும் விளைவிற்கு எதிராக செயல்படுகிறது.

அதனால் அந்த இரசாயனங்களுடன் வரும் எல்லாவிதமான லோஷன்களையும் மற்றும் கிரீம்களையும் பயன்படுத்துவதைவிட, உங்கள் கற்பனை சருமத்தைப் பெற இந்த இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள்!

ஆதாரங்கள்: பெல்லாடொரி, கறி நேஷன், டெர்ம்ஸ்டார், எல்லே, எவெரெட் ஹெரால்ட், பர்ஸ்ட்கிரை பாரென்ட்டிங், ஹிஅலி ஈட்ஸ் ரியல், இந்தியா.காம், இந்தியாமார்ட், எம்பிஜி லைப்ஸ்டைல், என்டிடிவி புட், ஆர்கானிக் பாக்ட்ஸ், தி எகனாமிக் டைம்ஸ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button