ஆரோக்கிய உணவு

நீங்கள் நீண்ட ஆயுளை பெற வேண்டுமா?அப்ப இந்த ஒரு பானத்தை குடிங்க

இன்றைய உலகில் நோயின்றி இல்லாதவரே இல்லை என்று சொல்ல முடியும்.

உலகில் சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க நாளுக்கு நாள் நோயாளிகளில் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் செல்கின்றது.

இதற்கு இன்றைய சூழலே ஓர் முக்கிய காரணமாக அமைகின்றது.

நோய்களை குறைத்து ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை உணவு முறைகளே சிறந்ததாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள்.

தற்போது நோயிற்றி நீண்ட காலம் வாழ்வதற்கு அந்த காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வரும் எலுமிச்சை மிகவும் நல்லது. இது சூட்டை தணிக்கும்,வெள்ளையணுக்கள் உற்பத்தியாகும், இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.

அந்தவகையில் எலுமிச்சை வைத்து தயாரிக்கப்படும் பானம் நம்மை நோயிலிருந்து பாதுகாக்கின்றது. தற்போது அந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
  • வெதுவெதுப்பான நீர் அல்லது பசும்பால் – 1 கப்
  • எலுமிச்சை சாறு – அரை மூடி
  • தேன் – அரை ஸ்பூன்
செய்முறை

முதலில் வெதுப்பான நீரில் மேலே சொன்னவற்றை நன்றாக கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.

இந்த நீர் உடலில் உல்ளுறுப்புகளில் உண்டாகும் காயம், புண்களை ஆற்றும். ஆர்த்ரைடிஸ் உள்ளவர்கள் தினமும் இந்த நீரை குடித்தால் வலி மறைந்து குணமாகும்.

இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல் இருந்தால் அவசியம் இந்த நீரை குடித்துப் பாருங்கள். கல்லீரலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும்.

ரத்தத்தில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதயம் , மூளை ஒரு சேர வலுவாகிறது.

 

இந்த நீரை குடிப்பதால் அடிக்கடி சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை குறைய உதவி புரியும். அதோடு குடலில் தங்கும் கொழுப்பு செல்களை கரைக்கிறது.

நரம்பு சம்பந்தபட்ட வியாதிகள், மூளை சம்பந்தபட்ட வியாதிகள் வராமல் தடுக்கிறது. வயதான பின் வரும் அல்சைமர், டெமென்ஷியா போன்ற நினைவு பிறழும் நோய்களை வராமல் காக்கிறது.160.90

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button