அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

புருவம் வளர எளிய வழிகள்

முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத்தகைய புருவங்கள் சிலருக்கு மிகவும் குறைவாக இருக்கும். சொல்லப்போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது.

ld1879

ஆமணக்கு எண்ணெயில் அதிகமான அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய். இதற்கு இந்த எண்ணெயை புருவத்தில் தடவி, 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் அரை மணிநேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில், கிளின்சரைப் பயன்படுத்தி கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், புருவம் நன்கு வளரும். பால் பொருட்களில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன.

ஆகவே இரவில் தூங்குவதற்கு முன்பு, பாலை புருவத்தில் தடவி படுக்க வேண்டும். இதனால் பாலில் உள்ள இயற்கைப் பொருள் முடியின் வேர்களுக்கு ஒரு நல்ல ஈரப்பசையைத் தந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

வெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வேகமாக வளரச் செய்யும். ஆகவே வெங்காயச் சாற்றை காட்டனில் நனைத்து தடவிக் கொள்ள வேண்டும். முக்கியமாக இதனை தடவியதும் கழுவிடக் கூடாது. கழுவாமல் இருந்தால் தான், இதன் முழு பயனை அடைய முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button