அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

சூரிய ஒளியால் பொலிவிழந்து விட்ட முகத்திற்கு இதை செய்யுங்கள்!…

பொதுவாக சிலருக்கு வெயிற்காலத்தில் முகம் மற்றும் சருமம் பொழிவிழந்து காணப்படுவது வழக்கம்.

இதற்கு உருளைக்கிழங்கு பெரிதும் உதவி புரிகின்றது. இது சருமத்திற்கு சிறந்த முறையில் பொலிவினை தருகின்றது.

தற்போது உருளைக்கிழங்கை வைத்து எப்படி சரும பொலிவை அதிகரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு சாறு – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் சாறு – 2ஸ்பூன்
ஒரு சிட்டிகை மஞ்சள்

face5

செய்முறை

மஞ்சளுடன் எல்லா சாறுகளையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவவும்.

இந்த பேஸ்ட் உங்கள் முகத்தில் முழுவதுமாக காயும் வரை காத்திருக்கவும்.

காய்ந்தவுடன் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

ஒரு வாரத்தில் இரண்டு முறை இதனைப் பின்பற்றுவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

குறிப்பு –

எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நேரடியாக எலுமிச்சை சாற்றை முகத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button