ஆரோக்கியம் குறிப்புகள்

உயிரணுக்கள் கிடுகிடுவென அதிகரிக்க கரும்பு சாறு!…

அதிகளவு நாம் உட்கார்ந்து பணியாற்றி வரும் சூழ்நிலையில்., நமது உடல் நிலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் உடலில் சுரக்கும் இன்சுலினின் அளவின் காரணமாக ஆண்மை குறைவானது ஏற்பட்டு வருகிறது. நமக்கு ஏற்படும் சிறிய பிரச்னையை நாம் பெரும்பாலும் மருத்துவர்களிடம் அடுத்து கூறுவது இல்லை., அவ்வாறு நாம் மருத்துவர்களிடம் செல்லும் பட்சத்தில் சிலருக்கு தகுந்த தீர்வுகள் எட்டப்படுவதில்லை.

ஆண்மையை அதிகரிக்க வேண்டும் என்று எந்த விதமான மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் அதில் வரும் பக்க விளைவையும் நாம் சேர்த்து தான் அனுபவித்து கொண்டு இருக்கிறோம். இதனால் நிரந்தரமான தீர்வுகளும் கிடைக்கப்படுவதில்லை. இந்த பிரச்சனைக்கு இயற்கையான மருத்துவமானது நல்ல தீர்வை வழங்குகிறது.

karumpuchru

தினசரி நாம் அருந்தும் பாலில் இருக்கும் சத்துக்கள் மூலமாக நாம் இரவு வேளையில் பாலை குடித்து வந்தால் உயிரணுக்களின் உற்பத்தியானது வெகுவாக அதிகரிக்கும்.

தினமும் தாமரை பூவின் விதையை ஒரு குவளை பாலில் சேர்த்து குடித்து வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். வெண்டைக்காயின் வேறை இடித்து பொடியாக வைத்து., தினமும் உணவை சாப்பிட்ட பின்னர் பாலில் கலந்து குடித்து வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அருந்தும் கரும்பு சாறு கற்கண்டுடன் முருங்கை பூவை சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும்.

தினமும் சாப்பிடும் வெங்காயத்தை நன்றாக வதக்கி தேனை சேர்த்து இரவில் பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

பாதாம் பருப்பை கொடிப்பசலை கீரை சாற்றில் ஊற வைத்து., அவை ஊறிய பின்னர் நன்றாக பொடியாக்கி பாலில் கலந்து தினமும் ஒரு தே. கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் உயிரணுக்கள் அதிகரிக்கும். அரச இலைகளின் கொழுந்தை அரைத்து சூடான பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும். இதுமட்டுமல்லாது உலர்ந்த செம்பருத்தி பூவினை உலர்த்திய முருங்கையுடன் சேர்த்து பொடியாக அரைத்து சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button