ஆரோக்கியம்

கைகள் பசுமையாக இருக்க செய்யவேண்டியது!…

நம்முடைய கைகள் வெயில் காலங்களிலும் குளிர்காலங்களிலும் செரசெரப்பாக வறண்டு போய் காணப்படும். இதற்கு செய்யவேண்டிய முக்கிய மருத்துவ முறை. முதலில் தேன் மெழுகு,தேங்காய் எண்ணெய்,கோகோ பட்டர் ஆகியவற்றை இரு மடங்கு கொதிக்கும் நீரில் போடவும். அவைகளை கரையும் வரை கொதிக்க விடவும் .

அதன் பின் பாதாம் எண்ணெய் அல்லது லாவண்டர் அல்லது எலுமிச்சை எண்ணெயை சில துளிகள் இடவும். பிறகு சோற்றுக் கற்றாழையின் சதைபகுதி, தேன் ஆகியவற்றையும் எல்லாம் சேர்ந்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.

hand

இப்போது இந்த கலவையை ஆற விடவும் .குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும் . இது நன்றாக குளிர்ந்து, உறைந்துவிடும். இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நன்றாக க்ரீம் போல் ஆகிவிடும்.

இதனை ஒரு சுத்தமான கன்டெயினரில் வைத்துக் கொள்ளவும் .தினமும் இரவில் இதனை கைகளில் நன்றாக தடவி தூங்கச் செல்லவும் . க்ரீம் உபயோகப்படுத்தியதும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

இந்த மாதிரி தொடர்ந்து செய்தால் கைகள் மிகவும் மிருதுவாகி, சொரசொரப்பு நீங்கிவிடும் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button