அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

Himalaya-Herbal-Products-for-Skin-598x345சருமத்திலேயே சென்சிட்டிவ் சருமத்தை பராமரிப்பது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அத்தகைய சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தை பராமரிக்க ஒருசில பொருட்களே உள்ளன.

வேறு ஏதாவது பயன்படுத்தினால், சருமத்தில் நிறைய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். இப்போது சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களின் சருமத்தை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

• ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

• சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருளாக பயன்படுகிறது. அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து காய்ந்ததும், குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

• எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னரே இந்த முறையை செய்வது நல்லது.

• வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.

• டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, முகத்தில் தடவி 20 நிமிடம் காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவிய பின்னர் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமம் படிப்படியாக பொலிவு பெருவதை காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button