அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள் முகப்பருவை போக்க இயற்கை முறையில் நிரந்தர தீர்வு

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். இது மரபியலாக வரும் பிரச்சனையல்ல.

* கடையில் ஈஸ்டை வாங்குங்கள். ரோஸ் வாட்டரில் ஈஸ்ட் போட்டு 20 நிமிடம் ஊற வையுங்கள். பேஸ்டாக வரும். இதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள். வந்த பரு நீங்கும். இனி பருவோ வராது.
be4be10f23cbad
* எலுமிச்சை சாறில் அஸ்கார்பிக் அமிலம் இருப்பதால், ஆக்னியை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும். நேரடியாக எலுமிச்சை சாறை முகத்தில் போட கூடாது. மற்ற பொருட்களோடு சேர்த்துதான் எலுமிச்சை சாறை சேர்க்க வேண்டும். யோகர்டை நன்றாக வடிகட்டி கெட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் கெட்டி யோகர்ட் அல்லது தயிர். அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மாதுளை சாறு கலந்து முகத்தில் ஃபேஸ் மாஸ்காக போடலாம். 30 நிமிடங்கள் கழித்து வெறும் நீரில் கழுவலாம்.

* வேப்பிலை பவுடரை ரோஸ் வாட்டர் கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இரவில் முகம் முழுவதும் பூசிய பிறகு, படுத்து உறங்கி மறுநாள் கழுவி விடலாம். முகப்பரு குறைந்து இருப்பது தெரியும்.

* ஜாதிக்காயை சிறிது ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள். அதேபோல சந்தன கட்டையை ரோஸ் வாட்டர் விட்டு இழைத்து, முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் பூசுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button