தலைமுடி சிகிச்சை

முடிகளை கருமை நிறமாக மாற்ற உதவும் எளிய டிப்ஸ்!

கூந்தலைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும், அலங்கரிக்கவும் பெண்கள் செய்யும் செலவுகள் ரொம்பவே அதிகம். அவசர யுகத்தில் விற்பனையில் இருக்கும் பொருட்களில் நம்பகத்தன்மை இல்லை.

அதிகமான ரசாயன கலப்பால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு எதிர்பாராதவிதமாக, சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன.
ffjg
இவற்றைத் தவிர்க்க இயற்கை சார்ந்த சில மூலிகைப் பொருட்கள் மற்றும் நம் இல்லங்களில் அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி முடியை எவ்வாறு பாதுகாத்து பராமரிப்பது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1. நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் அவுரி பொடி இயற்கையாகவே கருமை கலந்த ஊதா நிறத்தை தருவது. மருதாணி இலை சிவப்பு நிறத்தை தரும். முதலில் மருதாணி இலையினை அரைத்து தலையில் தடவி சிறிது நேர இடைவெளியில், அவுரி பொடியையும் தலையில் தடவி ஒரு மணிநேரம் கழித்து சுத்தம் செய்தால் வெள்ளை முடிகளில் கருமை நிறம் ஏறி இருக்கும்.
hjhjhhhj
2. கரிசலாங்கண்ணியுடன் கறிவேப் பிலை மற்றும் நெல்லிக்காய் பொடி இணைத்து அரைத்து முடிகளின் வேர் கால்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் வெள்ளை முடியின் வளர்ச்சி கட்டுக்குள் வரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button