அழகு குறிப்புகள்

தலைமுடி கருப்பாக மாற., நரைமுடி பிரச்சனை தலை முடி வளர்ச்சிக்கு கரும்பூலா..!!

இன்றுள்ள நிலையில் பெரும்பாலானோருக்கு தலைமுடி நரைப்பது மற்றும் தலை முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளால் அவதியுற்று வருகின்றனர்.

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு செயற்கை முறையிலான பொருட்களை உபயோகம் செய்வது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்ய உள்ள இயற்கை முறை குறித்து இனி காண்போம்.

தலைமுடி உதிர்வை குறைத்து., முடிகளின் வேர் கால்களில் உள்ள அணுக்களின் பாதிப்பை சீராக்கி., தலையில் முடி வளர்ச்சிக்கு தேவையான மெலனின் பொருளை உற்பத்தி செய்து., தலைமுடியை நன்றாக வைத்திருக்கும் அரியவகை மூலிகைதான் கரும்பூலா…
yiuyuiyu
இந்த கரும்பூலா செடியில் இருக்கும் இலைகள் மற்றும் கனிகளின் வேதிப்பொருள் காரணமாக நரையை ஏற்படுத்தும் மெலனின் பாதிப்பை சீராக்கி., தலைமுடியை நன்கு கறுப்பாக்குகிறது.

கரும்பூலா மூலிகை எண்ணெய்யை தயாரிக்கும் முறைகள்:

கருப்பூலா., அவுரி., மருதோன்றி மற்றும் கருவேப்பிள்ளையின் இலைகளை தனியாக எடுத்து சாறெடுத்து கொண்டு., பின் கரும்பூலா பழங்கள் மற்றும் நெல்லிக்காய் சதைகளை சேர்த்து., சிறிதளவு தேங்காய் எண்ணையுடன் இலைகளின் சாற்றை கலந்து., இந்த கலவையுடன் கடுக்காய் சூரணத்தை சேர்த்து., மண் சட்டியில் நிரப்பி., வெள்ளை துணியால் நன்கு கட்டப்பட்ட பின்னர் சூரிய வெளிச்சத்தில் வைக்க வேண்டும்.
tyitui
இந்த செயலை ஓரிரு வாரங்கள் செரித்த பின்னர்., இதில் இருந்து கிடைக்கப்பெற்ற எண்ணெய்யை எடுத்து., தலையில் தேய்த்து பின்னர் சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி பிரச்சனை சரியாகி., தலைமுடி கருப்பாக மாறும். இதனைப்போன்று முடி உதிர்வுக்கு கட்டுப்படும். எண்ணெய்யை மேற்கூறியபடி தயார் செய்து காய்ச்சி பயன்படுத்தவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button