மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை விரைவாக குணப்படுத்த தினமும் இந்த காயை சாப்பிட்டால் போதும்

கொடியில் வளரும் கோவைக்காயின் காய்கள், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்ற அனைத்துமே அதிக மருத்துவ குணம் உடையது.

கோவைக்காயின் முழுத் தாவரமும் அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. இந்த தாவரத்தின் மலர்கள் வெள்ளை நிறமாகவும், பழமானது, ரத்த சிவப்பு நிறத்தில் சதைப்பற்றுடன் காணப்படுகிறது.

இத்தகைய கோவைக்காயை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.

சர்க்கரை நோயை குணப்படுத்த எப்படி சாப்பிட வேண்டும்?
  • முதலில் கோவைக்காயை சிறிதாக நறுக்கி அதனை வெயிலில் நன்கு காய வைத்து பின்பு அதனை பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்பு அந்த பொடியை தினமும் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு சுடுநீரில் 1 டீஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடனடியாக சர்க்கரை நோய் குண்மாகும். மேலும் இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
  • கோவைக்காய் சாறு நீரிழிவு நோய் மருத்துவத்தில் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கோவைக்காய் நல்ல பலனை கொடுக்கிறது.625.0.560.350.160 3

     

கோவைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • கோவைக்காயை, பச்சடி செய்து தொடர்ந்து இரண்டு நாட்கள் மட்டும் பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் குணமாகிவிடும்.
  • கோவைக்காயின் இலை மற்றும் தண்டுகள், கபத்தை வெளியேற்றி வலியைக் குறைக்கும்.
  • கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றை தீர்க்கும் நல்ல மருந்தாகும்.
  • இதனுடைய இலை மற்றும் தண்டை கஷாயம் வைத்து சாப்பிட்டால் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலன் தரும் சிறந்த மருந்தாக உள்ளது.
  • கோவைகாயின் இலைச் சாறு, பித்தம், மூல நோய் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button