அழகு குறிப்புகள்ஆரோக்கிய உணவு
தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?
சாதாரணமாக தேங்காயிலும் , தேங்காய் தண்ணீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவே அதைவிட மிக பன்மடங்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் இருக்கின்றன . இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிகபட்சமான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக அதிகரித்து விடும்.
அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்களைத் தவிர்க்க முடியும். மன அழுத்தம் அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதிபயங்கர சக்தி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். ஜீரணத்தை அதிகமாக்க அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ விளங்குகிறது .