ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா துணையின் வியர்வை துணி உங்களின் மன அழுத்தத்தை போக்குமாம்!!

வியர்வை படிந்த உங்கள் துணையின் துணிகளை முகர்ந்தால், மனஅழுத்தம் குறையும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

இங்கிலாந்தின் பிர்மிங்கம் பகுதியில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி அழிக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளது. மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் துணையின் வியர்வை வாசனையை முகர்ந்தால் எல்லாம் சரியாகும் என்றும், அதே நேரத்தில் உங்கள் துணையல்லாத வேறு ஒருவரின் வியர்வையை முகர்ந்தால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும் உறுதியாகியுள்ளது.

இந்த ஆய்வில் சுமார் 92 ஜோடிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 24 மணிநேரத்திற்கு ஆண்கள் அனைவர்க்கும் ஒரு டி-ஷர்ட் அணிய அறிவுறுத்தப்பட்டது. முக்கியமாக எந்த வாசனை திரவியங்களும் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டது. பின்பு அவர்களது உடைகளை உறைய செய்து அப்படியே வியர்வை வாசனை போகாமல் வைத்துக்கொண்டனர். swetting cloth

பின்பு புதிய ஒரு சட்டையையும், இந்த வியர்வை படிந்த சட்டையையும் அவர்கள் துணைகளை முகர்ந்து பார்க்க சொன்னார்கள். பின்பு அவர்கள் அனைவரும் மன அழுத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது தான் இந்த அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக பெண்கள் தங்கள் துணையின் வியர்வையை முகரும் போது, மன அழுத்தத்தை உண்டாகும் ‘கார்டிசால்’ என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்கள் துணியை வசீகரிக்க பல வாசனை திரவியங்களை தேடி தேடி அலைந்த ஆண்களுக்கு இந்து ஆய்வு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button