தலைமுடி சிகிச்சை

உடனே செய்யுங்க ! ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது.

பெண்கள் என்றாலே அவர்களுக்கு அழகு முடித்தான்.அத்தகைய முடியை நாம் பேணி பாதுகாக்க பல செயற்கையான வழிமுறை பின்பற்றினாலும் அதற்கு இன்னும் நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் முடி உதிர்வு மற்றும் பொலிவை இழக்கிறது. இதனால் பலரும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதனை நாம் நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி நமது கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

கூந்தலை பட்டு போல அழகாக பாதுகாப்பதற்கு உதவும் எளிய வழிமுறையை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
ggyt
தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் -1

தயிர் -2 தேக்கரண்டி

தேன் -1 தேக்கரண்டி

செய்முறை :

வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த விழுதை கூந்தலின் நுனி முதல் அடி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை நன்கு ஊற வைத்து பின்பு கூந்தலை நன்கு அலசவும். இந்த ஹேர் மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. இந்த ஹேர் மாஸ்க் முடி மிகவும் பட்டு போல மென்மையாகவும் , பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button