ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! காலையில் 12 கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கறிவேப்பிலை பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் மட்டுமே சேர்க்கப்படுகின்றது.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி,கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

அத்தகைய கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலிற்கு பல நன்மைகள் கிடைக்கும்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இரத்த சோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.கருவேப்பிலை

முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடித்தால், வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும்.

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை உள்ளவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button