32.1 C
Chennai
Sunday, May 11, 2025
tyiyu
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் சருமத்திற்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத இயற்கை அழகு குறிப்புகள்

சருமத்திற்கு பயன்படுத்தும் கீரிம்களில் ஆபத்துக்கள் உள்ளதால், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எவ்வாறு பொலிவுடன் வைத்திருப்பது என்பதை பார்ப்போம். இவை எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது.

கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போகும்.

சோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சோர்வு நீங்கி கண் பிரகாசமாக இருக்கும்.

தலைமுடி நன்கு வளர வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
tyiyu
சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்து வந்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்துவிடும்.

Related posts

விருந்திற்கு அழைத்த அண்ணன்!உயிரைவிட்ட சோகம்

nathan

முகத்தை பளிச்சிட வைக்கும் சிறந்த இயற்கை வழிகள்!…

nathan

இதை முயன்று பாருங்கள் உங்க கையில சிவப்பு நிறத்துல சிறு சிறு புள்ளிகள் இருக்கா?

nathan

உங்கள் பற்களை அழகாக மாற்ற இந்த குறிப்புப்பை படியுங்கள்!…

sangika

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே இமீடியட் சிகப்பழகு பெற முடியும்.

nathan

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan

புருவங்கள் அடர்த்தியாக வளர வழிகள்

nathan

தினமும் உங்கள் ச‌ருமதை பாதுகாக்கும் ஒரு சில வழி முறைகள்

nathan

உங்களை பிரஷ்ஷாக்க இந்த பேஸ் மாஸ்க் போடுங்க…

nathan