ஆரோக்கியம் குறிப்புகள்

முயன்று பாருங்கள்..இதோ இயற்கைவைத்தியம்!!! குழந்தை பிறந்ததும் குண்டானவர்களுக்கு

பெண்கள் குழந்தை பிறந்ததும் ஏன் குண்டாகிறார்கள் தெரியுமா? அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் கார்மோன்கள் இயல்பாக சுரப்பதில்லை இதனால் அவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கிறது.

இதனால்தான் குறைந்தவயதிலேயே பலவியாதிகளை பெண்கள் சந்திக்கின்றனர். குறிப்பாக சிறுநீரக கல், தைராயுடு, சுகர்போன்றவை. ஆனால் உடல் பருமனை பெண்கள் குறைக்க முயற்சிக்கலாம். இதற்கென்று அவர்கள் தனியாக பயிற்சி எடுக்கத்தேவைஇல்லை. இதை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாம்.

வாழைத்தண்டின் நன்மைகள் :கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.
dtytey
தேவையானவை:
வாழைத்தண்டு
மிளகு ,
சீரகம்,
பூண்டு
எலுமிச்சை சாறு
சிறிது உப்பு

செய்முறை :வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.

வாழைத்தண்டு மோர்க்கு தேவையானவை:
வாழைத்தண்டு
மோர்
இஞ்சி சாறு
பெருங்காயத் தூள்

gfhd

செய்முறை :வாழைத்தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும்.
தொடர்ந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்

The post குழந்தை பிறந்ததும் குண்டானவர்களுக்கு இதோ இயற்கைவைத்தியம்!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button