ஆரோக்கியம் குறிப்புகள்

இதை பயன்படுத்தி பாருங்கள் ..! கருமையான கூந்தல் வேண்டுமா..?

நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது.

கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும் ,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம்.

வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு நாள் முன் ஊறவைக்கவும். நன்கு ஊற வைத்த வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.இதனை தலையில் தடவி 45 பிறகு தலையை அலசவும் வாரம் இருமுறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
eredg
கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ மற்றும் மருதாணியை அரைத்து சிறிது சிறிதாக காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினசரி உபயோகித்து வந்தால் நல்ல பலன் தரும்.

கறிவேப்பிலை பொடியை தினமும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தோடு தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

கறிவேப்பிலைபொடி அல்லது கறிவேப்பிலையை அரைத்து தயிர் கலந்து அரை மணி நேரம் கழித்து தலை குளித்தால் தலைமுடி வளர்ச்சி மேலும் பொடுகு வறட்சி போன்றவை நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button