பெண்கள் மருத்துவம்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் பணத்தை இப்படிதான் வைக்க வேண்டுமா? இது தெரியாம போச்சே..!

இன்றைய காலக்கட்டத்தில் பணம்தான் பிரதானம் என்று உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக, பணம் என்பது மகாலட்சுமி சம்பந்தப்பட்டது. ஆகையால்தான், நமது பெரியோர்கள் தங்களது சமையலறையில் இருக்கும் மிளகு, சீரகம், அஞ்சறைப்பெட்டி போன்ற வாசனை பொருட்களுடன் பணத்தை சேமித்தனர்.

அதேபோல் ஆண்கள் தங்களது படுக்கையறையில் அவர்களுடைய பணத்தை சேமிக்கும் இடமாக வைத்திருந்தனர். ஆனால், இன்றைய வீடுகள் சுருங்கி புறா கூண்டுகள் போல சிறிது சிறிதாக கட்டப்படுவதால் அறைகள் அனைத்தும் தவறாக கட்டப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரப்படி தென்மேற்கு பகுதியில் பீரோவை வைப்பதே சரியான திசையாகும். அந்த திசையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

145510444bf0508627430af3ab0d332b0c93021178732854976238357315

சிலருக்கு எந்த திசையை நோக்கி திறக்க வேண்டும் என்ற சந்தேகம் வரும். தெற்கு சுவறை ஒட்டி வடக்கு பார்த்தவாறும், கிழக்கு பக்கம் திறப்பதுமாக வைக்கலாம். மேலும் தென்மேற்கு அறையில் தென்மேற்கு மூலையில் மரத்தினால் செய்யப்பட்ட பணப்பெட்டியில் வைத்து சேமிப்பது மிக மிக சிறந்தது. எக்காரணத்தை கொண்டும் வடகிழக்கிலோ அல்லது வடமேற்கிலோ பீரோ வைப்பதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் வீட்டில் பீரோவை மாற்றி வைத்திருந்தால் உடனே சரியான அமைப்பில் அதை சரிசெய்துவிடுங்கள். இப்படி செய்வதால் நம் பிரச்சனைகள் தீரும் என்றால் அதை செய்து பார்ப்பதில் தவறு ஒன்றுமில்லையே. முயற்சிப்போம்.! வெற்றி பெறுவோம்.!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button