அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. முகத்தில் காணப்படும் எண்ணெய் பிசுபிசுப்பை தவிர்க்க சில வழிகள்!!

ஒவ்வொரு நபர்களுக்கும் அவர்களது உடலின் தன்மைக்கு ஏற்ப சருமத்தின் நிலை மாறும். உங்களது சருமம் எந்த மாதிரியான சருமம் என்பதை கண்பிடித்து அதற்கு ஏற்றமாதிரி அதனை பாதுகாக்க வேண்டும்.

பெரும்பாலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று நான்கு வகைகளாக பிரிக்கபடுகிறது.

எண்ணெய் சருமத்தை பெற்றவர்களுக்கு எப்போதும் முகத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு காணப்படும். அவர்களுக்கு முகத்தில் எப்பொதும் எண்ணெய் வடிந்த படியே காணப்படும். இதை தவிர்க்க பின்வரும் சிலவற்றை பின்பற்றுங்கள்.
gjhjhg
* தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால்,முகத்தில் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறையும்.
* முகத்தை அடிக்கடி சுத்தமான கழுவ வேண்டும். அதிலும், தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்வது நல்ல பலனளிக்கும்.

* வெள்ளரிகாய் குளிர்ச்சி தன்மை உடையது.வெள்ளரிக்காயை முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம். வெள்ளரிகாய் வெட்டி கண்களில் வைத்தால் கண்ணனுக்கு நல்லது. வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து பயன்படுத்தலாம். தக்காளி சாறு எடுத்தும் பயன்படுத்தலாம்.

* பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவல் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

* சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், எண்ணெய் பசை நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button