ஆரோக்கிய உணவு

காலையில் ஒரு துண்டு இஞ்சி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்

சாதாரணமாக இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இஞ்சியை தினம்தோறும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், பசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி மாறிவிடும் . தண்ணீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, சீக்கிரமாக நிவாரணம் கிடைக்கும்.

13523927077ebeed19a71483951117050fbfd05e91b8705ca24f9c2facc0345f6f4bbb4c86409319259519413172

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button