சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! உங்க கையும், காலும் கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

அழகு பராமரிப்பு என்று வரும் போது முகத்திற்கு தான் அதிக அக்கறை காட்டுவோம். ஆனால் முகம் மட்டும் பளிச்சென்று இருந்து, கை, கால்கள் கருமையாக இருந்தால் நன்றாக இருக்குமா என்ன?

அதிலும் தற்போது அடிக்கும் வெயிலில் சிறிது நேரம் நடத்தாலே சரும நிறம் மாற ஆரம்பிக்கும் அளவில் வெயில் கொளுத்துகிறது. எனவே உங்கள் அழகு மேம்பட வேண்டுமானால், கை, கால்களுக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

இங்கு கை மற்றும் கால்களில் உள்ள கருமையைப் போக்க சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தினமும் பின்பற்றி வந்தால், கை மற்றும் கால்களில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன்
வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும்.

ஆலிவ் ஆயில்
தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர, கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஆலிவ் ஆயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

இளநீர்
இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் கருமை நீங்கும்.

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய்
எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.

hands 01 1456816329
தயிர்
தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து வர, சரும வறட்சியும் நீங்கும்.

தக்காளி
தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.

முட்டை வெள்ளைக்கரு
உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.

ஓட்ஸ் மற்றும் தயிர்
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கலந்து, கை, கால்களுக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கும் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் போய்விடும்.

பால் மற்றும் பப்பாளி
கை, கால்கள் வெள்ளையாக வேண்டுமானால், பால் பவுடருடன் தேன் மற்றும் மசித்த பப்பாளி சேர்த்து கலந்து, தடவி நன்கு ஊற வைத்து கழுவ, சருமத்தின் நிறம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.

பால்
காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி உலர வைத்து, நீரில் நனைத்த பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் வெளியே வெயிலில் சென்று வந்ததும் செய்தால், சருமத்தில் உள்ள கருமை சீக்கிரம் போய்விடும்.

ஊற வைத்த பாதாம்
இரவில் நீரில் ஊற வைத்த பாதாமை அரைத்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, கை, கால்களில் இருக்கும் கருமை நீங்கி, வெள்ளையாகும்.

சந்தனம்
முல்தானி மெட்டி பொடியுடன், சந்தன பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சரும கருமை சீக்கிரம் போய்விடும்.

சீரகம்
சீரகத்தை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் குளிர வைத்து அந்நீரால் கை, கால்களை தினமும் பலமுறை கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மைசூர் பருப்பு
மைசூர் பருப்பை பொடி செய்து, அத்துடன் தயிர் அல்லது பால் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கை, கால்களின் நிறத்தை அதிகரிக்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சையின் ஒரு துண்டை எடுத்து, கை, கால்களில் தேய்த்து, பின் கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கருமை விரைவில் நீங்கும். ஆனால் எலுமிச்சையை பயன்படுத்திய பின், கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.

உருளைக்கிழங்கு
வெள்ளையான சருமம் வேண்டுமானால், உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் கை, கால்களில் தடவி உலர வைத்து, பின் நீரில் நனைத்து பஞ்சு கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

பட்டை மற்றும் தேன்
பட்டை பொடியுடன் தேன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button