ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இந்த அற்புத காயை வைத்தே நீரிழிவு நோயை விரட்டியடிக்கலாம்!

2030 ஆம் ஆண்டில் இறப்பை ஏற்படுத்தும் நோயில் நீரிழிவு நோய் ஏழாவது இடத்தை பிடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பெருகி வரும் டயாபெட்டீஸ் நோயை நம்மாலால் கட்டுக்குள் கொண்டு வர முடியாது. ஆனால் நமது வாழ்க்கையை சில வழிமுறைகளின் மூலம் ஆரோக்கியமாக மாற்ற இயலும்.

இதன் மூலம் உங்கள் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைத்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ அறிவியலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன. அதில் சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பான நன்மை அளிக்கும் ஒரு காய் தான் சுரைக்காய்.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சுரைக்காயை சாப்பிட்டால் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

625.500.560.350.160.300.0 4

2013 ஆம் ஆண்டு இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT) மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் உட்கொள்ளும் (13) காய்கறிகளில் காணப்படும் நொதிகள் வகை 2 நீரிழிவு மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவியது தெரிய வந்துள்ளது.

சுரைக்காயை எப்படி சாப்பிட்டால் சக்கரையை கட்டுப்படுத்த முடியும்.
  • சுரைக்காயை சாப்பிடும் சிறப்பான வழி, அதைக் கொண்டு கிரேவி தயாரிப்பது தான். ஆனால் அந்த காயைக் கொண்டு கிரேவி தயாரிக்கும் போது, அதில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்க்காதீர்கள்.
  • சுரைக்காயை சாப்பிடுவதற்கான மற்றொரு சிறப்பான வழி, தயிருடன் சேர்த்து உண்பது தான்.
  • சுரைக்காய் ரெய்தா இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
  • சுரைக்காயை சாலட் வடிவிலும் சாப்பிடுவது சிறப்பான வழி.
  • அதற்கு சுரைக்காயை வேக வைத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் மற்றும் இதர நற்பதமான காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடவும்.
  • சுரைக்காயை பருப்பு வகைகளுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
  • அதுவும் சுரைக்காய் மற்றும் ஏதேனும் ஒரு பருப்பை குக்கரில் போட்டு, நீர் ஊற்றி விசில் விட்டு இறக்கி, சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமானது மட்டுமின்றி, சுவையானதும் கூட.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button