குஷ்பு காட்டம் ; அஜித் கட்டாயம் வெட்கப்படுவார்

பொதுவாகவே இக்கட்டான நேரங்களில் உதவி செய்பவர்களை விட, உதவி செய்கின்றவர்களை விமர்சிக்கும் மன நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனரோ என்கிற சந்தேகம் ஏற்படவே செய்கிறது.. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்துள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பெப்ஸி தொழிலாளர் அமைப்பு சினிமா நட்சத்திரங்களிடம் நிதி திரட்டி வருகிறது.. அந்தவகையில் தானும் தனது கணவர் சுந்தர்.சியும் சேர்ந்து 5 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளதாக நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.

உடனே விஜய் தமிழன் என்கிற பெயரில் அஜித் ரசிகன் என தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு நபர், “அப்போ தமிழ்நாட்டு மக்களுக்கு எதும் செய்ய மாட்டிங்க, கூத்தாடி கூத்தாடிக்கு தானா கொடுத்து உதவுவார்கள்” என குஷ்புவின் உதவியை விமர்சித்து இருந்தார். இதனால் காட்டமான குஷ்பு, “உன்னைப்போன்ற ஒரு நபரை ரசிகர் என சொல்லிக் கொள்வதற்கு அஜித் நிச்சயம் வெட்கப்படுவார்” .என பதிலளித்துள்ளார்.NTLRG 2020033

அஜித் ரசிகனாக இருப்பவர் விஜய் பற்றி வேண்டுமானால் விமர்சிப்பரே தவிர, மொத்தமாக சினிமா நபர்கள் பற்றி விமர்சிப்பாரா என்கிற சந்தேகம் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை பார்க்கும்போதே எழுகிறது… அதுமட்டுமல்ல ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் அடாத செயல்களுக்கு எல்லாம் அஜித் எப்படி பொறுப்பாக முடியும் என்றும் சில ரசிகர்கள் குஷ்புவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button