8 750x430 1

சற்றுமுன் கொரொனா வைரஸ் தொற்று உறுதி படுத்தப் பட்ட நிலையில் மாரடைப்பால் பிரபல இந்திய பாடகர் மரணம்..!

இந்தியாவின் பிரபல பாடகர் கியானி நிர்மல் சிங் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்த செய்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படங்கள் மட்டும் இன்றி இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்த கியானி நிர்மல் சிங் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியை முடிந்துக் கொண்டு பெப்ரவரி மாத இறுதியில் நாடு திரும்பி இருந்தார்.

பின் பொற்கோயிலில் பிரபல கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சியை நடத்திய இவர் இறுதியாக டெல்லியில் சில இசை நிகழ்ச்சியிகள் நடத்தி வந்த நிலையில் இவருக்கு மூச்சித் திணறல் மற்றும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப் பட்டது.8 750x430 1

இதனை தொடர்ந்து மார்ச் 30ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு பரிசோதனை செய்யப் பட்ட போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனை தொடர்ந்து கொரொனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வந்த கியானி நிர்மல் சிங் இன்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..!!kiyani nir