மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… இதய நோய்க்கான சில ஹோமியோபதி தீர்வுகள்!

உலகம் முழுவதிலும் இறப்பிற்கான பொதுவான காரணங்களில் இதய நோயும் ஒன்று. இதய நோய்க்கான சிகிச்சையில் முக்கிய விஷயம், இதயத்தை பற்றி நன்கு புரிந்து கொள்வது. இதயம் என்பது ஒரு தனிப்பட்ட முக்கிய உறுப்பு. இதயம் தனது செயல்பாட்டிற்காக மூளையைச் சார்ந்திருப்பதில்லை. இது தசைநார், வாஸ்குலர் மற்றும் தன்னியக்க நரம்பு மண்டலத்தால் ஆனது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பேஸ் மேக்கர் பொருத்தி, வழக்கமான செயல்பாடுகள் நடந்தேறும். இருப்பினும் அறிகுறிகளின் அடிப்படையில் கொடுக்கப்படும் சிகிச்சை என்றவுடன் அதில் ஹோமியோபதி முக்கிய பங்கு வகிக்கிறது.

உங்கள் மனம் மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகளை குறித்துக் கொள்ள வேண்டும். ஹோமியோபதி மருந்தை உங்கள் உடல் ஏற்றுக் கொள்கிறதா என்பதை அறிந்து கொள்வது முக்கியம். வேர் வரை சென்று நோயைக் கட்டுப்படுத்துவது தாள் இதன் நோக்கமாகும்.

ஹோமியோபதி மூலம் சிகிச்சை அளிக்கக்கூடிய இதய நோய் வகைகளை இப்போது காண்போம்.

பிறவியோடு உண்டான இதய நோய்கள்

இந்த நிலைக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படுகிறது. இருப்பினும், குழந்தை பருவத்தில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டால், ஹோமியோபதி மூலம் சிகிச்சையளிக்க முடியும். ஆர்னிகா (Arnica), ஹைபரிகம் (Hypericum), ஸ்டேபிசாக்ரியா (Staphysagria), லெடம் பால் (Ledum Pal), காஸ்டிகம் (Causticum) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும். பெரும்பாலும், இது சுவாச நோய்த்தொற்றுகளுக்கும் வழிவகுக்கிறது. ஆக்ஸிஜனின் பற்றாக்குறை காரணமாக இவை உருவாகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. இந்த வழக்கில், பிரையோனியா (Bryonia), ஆர்ஸ் ஆல்ப் (Ars Alb), ஆண்ட் டார்ட் (Ant Tart), துல்கமாரா (Dulcamara), ஐபேகாக் (Ipecac), கல்கேரியா கார்ப் (Calcarea Carb), பல்சட்டிலா (Pulsatilla) போன்ற மருந்துகளை சிறப்பாக பயன்படுத்தலாம்.homeopathy 15

கரோனரி தமனி நோய்கள்

கரோனரி தமனிகளில் உண்டாகும் பிளேக் படிவாக்கம் காரணமாக தமனி நோய்கள் உண்டாகின்றன. இது ஆஞ்சினாவிற்கு வழிவகுக்கிறது. இதனால் உண்டாகும் குறைவான இரத்த ஓட்டம் காரணமாக நெஞ்சு வலி உண்டாகிறது. இந்த நிலையில் நோயாளிக்கு நெஞ்சை பிழிவது போல் வலி தோன்றும். அதிகரித்த அழுத்தம், பாரம் மற்றும் இறுக்கத்துடன் கூடிய நெஞ்சு வலி உண்டாகலாம். அவ்வப்போது இந்த வலி தோன்றி மறையலாம் அல்லது திடீரென்று வலி நீடித்து இருக்கலாம். அதற்கான ஹோமியோபதி மருந்துகளில் கற்றாழை, குளோனோயின் (Glonoine), பிரையோனியா (Bryonia), ஆக்ஸாலிக் அமிலம் (Oxalic Acid) மற்றும் ஸ்பிகெலியா (Spigelia) ஆகியவை அடங்கும்.

மாரடைப்பு

இரத்த உறைவு மற்றும் அடைப்பு காரணமாக இரத்த ஓட்டம் தடைபடுவதால் , இதயத்தில் உள்ள தசைகள் செயலிழந்து மாரடைப்பு உண்டாகிறது. இந்த நிலையில் மருத்துவ உதவி விரைவாக தேவைப்படும். நோயாளி தொடர்ந்து கண்காணிப்பு நிலையில் வைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் ஹோமியோபதி மருந்துகளில் ஆர்ஸ் காட் (Ars God), ஆரம் முர் (Aurum Mur), வைப்பேரியா (Viperia), கிராடேகஸ் (Crataegus) மற்றும் லாச்செஸிஸ் (Lachesis) ஆகியவை அடங்கும்.1 congenital heart disea

இதய செயலிழப்பு

கார்டியாக் அரெஸ்ட் என்று கூறப்படும் இந்த நிலையில் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலை உண்டாகிறது. மூச்சுத்திணறல், சோர்வு, கால்களில் வீக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பது போன்ற அறிகுறிகளை நோயாளி அனுபவிக்க நேரலாம். டிஸ்போனியா உள்ளிட்ட அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒருவர்ஆகான் ஃபெராக்ஸ் (Acon Ferox) மற்றும் ஆஸ்பெண்டோஸ் (Aspendos) ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.வீக்கம் போன்ற நிலைகளுக்கு, அடோனிஸ், டிஜிட்டலிஸ் மற்றும் காளி கார்ப் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அரித்மியா

ஒழுங்கற்ற அல்லது சீரற்ற இதயத்துடிப்பை அரித்மியா என்று கூறுவோம். உலகம் முழுவதும் சமீப காலங்களில் ஹோமியோபதி சிகிச்சை ஒரு சிறந்த சுகாதார சிகிச்சையாக பலன் அளிக்கிறது. வருங்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவ தீர்வாக இது பார்க்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றை பின்பற்றுவதால் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலும் ஹோமியோபதி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டால் ஒரு தகுதியான மருத்துவரிடம் கலந்தாலோசித்து, அவருடைய மேற்பார்வையில் மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button