ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் பழம்..!

நார்த்தம்பழம் புளிப்புச் சுவையுடையது. இது ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றைப் போன்று சிட்ரஸ் பழ வகையைச் சேர்ந்தது.இதில் அளவிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், மக்னீசியம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றது.சர்க்கரையை குறைத்து, கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இது எலுமிச்சையைப் போன்று கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும்.

கிட்டதட்ட 15 முதல் 20 அடி உயரம் வரை இம்மரம் வளரக்கூடிய ஆற்றல் கொண்டது. இந்த மரம் ஒரு புதர் வடிவ அமைப்பைக் கொண்டிருக்கும்.இதில் ஏராளமான தாது உப்புக்களும் வைட்மின்களும் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் சிறிதளவு இந்த பழத்தை எடுத்துக் கொள்வதும் மிகப்பெரும் பயனை உங்களுக்கு அளிக்கும்.இப்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று பார்ப்போம்

நார்த்தம்பழம் மிக அதிகமாகப் புளிப்பு சுவை கொண்டது என்பதால், நாம்பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. நார்த்தங்காய் சாதம் செய்யவும், ஊறுகாய் செய்யவும் மட்டுமே பயன்படுத்துகிறோம்.அதைவிட, சிறிது லேசாக உப்பை தூவி பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின்களும் கால்சியமும் மிக அதிக அளவில் உள்ளதால், உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

நார்த்தம்பழத்தில் ஒரு துளியளவும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், இயல்பாகவே இதய நோய்களுக்கான ஆபத்தைத் தவிர்க்கிறது.ஒரு நார்த்தம்பழத்தை ஜூஸ் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்துது. உக்குளிப்பழம் இரண்டு வீதமான தினமும் தேவைப்படும் மொத்த கால்சியம் கால்சியம் சேமிப்பு உள்ளது.இது எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் பெருமளவுக்கு உதவுகிறது.

தசை உருவாக்கம் மற்றும் தசை இயக்கங்களை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதாக நார்த்தம்பழம் இருக்கிறது. இதில் வெறுமனே வைட்டமின் சி மட்டுமல்லாது புரோட்டீன்களும் அதிக அளவில் சிறப்பாகக் கிடைக்கின்றன.உயிரணுக்களின் உற்பத்தியிலும் உயிரணுக்களை வளமுடையாக ஆக்குவதிலும் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவு மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்கிறது.நார்த்தம்பழம் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கிறது, பொதுவாக சிறுநீரகக் கல் வந்தபின், வாழைத்தண்டை அரைத்துக் குடித்துக் கொண்டிருப்போம்.625.0.560.350 1

ஆனால், நார்த்தம்பழமோ எவ்வளவு வேகமாக சிறுநீரகக் கல்லை கரைக்க முடியுமோ அவ்வளவு வேகமாகக் கரைத்துவிடும். சிறுநீரகக் கல் உருவாகாமல் பார்த்துக் கொள்ளும்.வைட்டமின் பி அதிக அளவில் நார்த்தம்பழத்தில் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.இந்த நார்த்தம்பழத்தில் பொதுவாகவே கலோரிகள் மிகமிகக் குறைவாக இருப்பதால் உடல் பருமனாவதை தடுக்க உதவுகிறது.இந்த பழங்களில் உள்ள நோய் எதிர்ப்பு திறன், உடலில் தேவையற்ற உயிர் அணுக்களை அழித்து, சிறந்த ஆக்சிஜனேற்ற செயல்பாட்டிற்கு துணை புரிகிறது.ஒரு மீடியம் சைஸ் நார்த்தம்பழத்தில் கிட்டதட்ட 45 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. இதில் ஒரு கிராம் அளவுக்கு புரதம் நமக்குக் கிடைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button