ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வீட்டில் இரவில் நாய்கள் ஊளையிட்டால் மரணமா.?

நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாய் தீடீரென்று ஊளையிடும். நாய் ஊளையிடுவதை அனைவரும் கெட்ட சகுனமாக கருதி வருகின்றனர்.

ஆனால், அதில் இருக்கும் உண்மை என்னவென்று தெரியுமா?நள்ளிரவு நேரங்களில் நாய் ஊளையிடுவது இயல்பான விசயம்.பொதுவாகவே நாய்கள் மனிதனிடம் மிகவும் பாசமாக இருக்கின்ற விலங்கினம். இரவில் அனைவரும் தூங்கிய பின்பு, நாய்கள் தனியாக இருக்கின்ற எண்ணத்தில் கவலைப்பட்டு அழுவதாக அறிவியல் கூறுகின்றது.

அந்த நேரத்தில், நமது கவனத்தினை ஈர்ப்பதற்காக கத்தவும், அழுகவும் நாய்கள் அவ்வாறு செய்கிறதாம். நாய்கள் ஊளையிடும் சமயத்தில்,சிறிது நேரம் அதன் அருகில் நின்று, அதனுடன் பேச்சு கொடுத்தால் அது அமைதி ஆகிவிடுமாம்.

அதனோடு, “நாய்கள் ஊளையிட்டால் மரணம் வரும்” என்று பொதுவாக மூடநம்பிக்கை நம்மிடம் இருந்து வருகின்றது. இனிமேல், நாய் ஊளையிடுவதை பற்றி பீதி அடையாமல் நிம்மதியாக தூங்குங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button