ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கல், வயிற்றுப் புழு, மற்றும் “மரு” போன்றவற்றிக்கு உடனடி தீர்வு இதோ…!!

வயிற்றில் புழு, மலச்சிக்கல் போன்றவை வந்துவிட்டால் வயிறு ஊதிக்கொள்ளும், வலிக்கத் தொடங்கும், பசிக்காது இது சிறுவர் முதல் பெரியவர் வரை இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை, இதற்கு மாதம் ஒருமுறை சில ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்வார்கள்.

என்ன தான் ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் வயிற்று வலி, மலச்சிக்கல் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். இன்று இதற்கான நிரந்தர தீர்வை தான் பார்க்கப் போகின்றோம். அத்திப் பழம் இது சாதாரணமாக கிராமத்தில் இருக்கக் கூடிய மரம் மற்றும் பழம் நகரத்தில் அதிகமாக கிடைக்கா விட்டாலும்..

அத்திக்காய் பவுடர் என மருந்து கடைகளில் விற்கின்றனர். அத்திக்காய் கிடைக்காதவர்கள் அத்திக்காய் பவுடரை பயன் படுத்தலாம் இரவு உறங்கச் செல்லும் முன் அத்திக்காயின் சதை அல்லது பவுடரை ஒரு கப் நீரில் மிக்ஸ் செய்து குடித்துவிட்டு தூங்குங்கள். காலையில் நீங்கள் மலம் கழிக்கும் போது இலகுவாக போகும் அதே நேரம் வயிற்றில் உள்ள பூச்சிகளும் வெளியேறிவிடும்.அடுத்து அத்திக்காய் பிஞ்சுகளை வெட்டி அதில் வரும் பாலை “மரு” உள்ள இடத்தில் பூசினால் மருக்கள் உதிர்ந்துவிடும். பிஞ்சு கிடைக்காதவர்கள் அத்தி மரத்தில் கீறினால் வரும் பால் போன்ற திரவத்தை மரு உள்ள இடத்தில் பூசினால் போதும் உடனடியாக உதிர்ந்து விடும்.

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.என்ன பிரண்ட்ஸ் இந்த டிப்ஸ் பிடிச்சிருக்கா? அப்போ பகிருங்கள்..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button