ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…வாங்கும் தங்கத்தை உப்புக்குள் வைத்து எடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாக இந்து மதத்தைப் பொருத்தவரையில் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள் இரண்டு கலந்த கலவையாகத் தான் இருக்கிறது.

ஆனால் அதில் ஒவ்வொரு சம்பிரதாயத்துக்கும் பின்னால் ஏதாவது அறிவியல் காரணங்கள் பொதிந்து கிடக்கும்.

அதில் ஒரு விஷயம் தான் இது. தங்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம் எல்லோருக்குமே தெரியும்.

குறிப்பாக, உப்பில் தங்கத்தை வைத்து எடுத்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொண்டு அதை நீங்களும் பின்பற்றுங்கள்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகமாகச் சேரும் என்று சொல்வார்கள். அதனாலேயே அட்சய திருதியை நாளில் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும்.

குறிப்பாக பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் சுக்கிரன் மற்றும் புதன் ஓரையில் ஒரு குண்டுமணி அளவு தங்கம் வாங்கினாலும் அடுத்தடுத்து தங்கம் வாங்கும் யோகம் வருமாம்.

அதேபோல புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த நட்சத்திரங்கள் சேர்ந்தது போல அட்சய திருதியை வந்தால் அந்த நாளில் நகை வாங்கினால் அவர்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது என்று சொல்வார்கள்.

தங்கமும் உப்பும்
நீங்கள் வாங்குகின்ற தங்கத்தை ஒரு சுத்தமான துணியில் கட்டி, உப்புக்குள் ஒரு நாள் முழுக்க முழுவதும் புதைத்து வைத்திருக்க வேண்டும்.
அதனால் தங்கத்தின் மீது இருக்கின்ற தோஷங்கள் முழுக்க விலகி விடும். உங்களிடம் இருக்கும் தங்கம் பெருகிக் கொண்டே போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button