மருத்துவ குறிப்பு

நன்மைகள் ஏராளமாம்! 1 டம்ளர் துளசி பாலை தினமும் காலையில் குடிச்சு பாருங்க…..

துளிசி பழங்காலத்தில் இருந்தே ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கும் மூலிகைகளுள் ஒன்றாகும்.

துளசியில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து, ஃபிளவனாய்டுகள் மற்றும் பல கரிம சேர்மங்களின் நல்ல ஆதாரமாக உள்ளது.

துளசி பல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடியது. அதற்கு துளசியை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடுவதைத் தவிர, பாலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, அதன் மருத்துவ பண்புகள் அதிகரித்து, உடல் ஆரோக்கியம் பல வழிகளில் மேம்படும்.

அந்தவகையில் தற்போது துளசிபாலை எப்படி தயாரிக்கலாம்? அதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

துளசி பால் தயாரிக்கும் முறை
  • 4-5 துளசி இலைகளை எடுத்து நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  • இறுதியில் அந்த பாலை வடிகட்டி, வேண்டுமானால் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
  • துளசி பாலில் உள்ள முழு சத்துக்களையும் பெற, அதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் அதன் முழு நன்மைகளையும் எளிதில் பெறலாம்.
நன்மைகள்
  • துளசியில் யூஜெனோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சிறப்பாக செயல்படவும் செய்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்துகிறது. அதோடு, பால் சிக்கலைத் தடுத்து இதயத்திற்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
  • துளசி பால் நோயெதிர்ப்பு சக்தி வலுப்பெறுவதோடு, பருவக்கால சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவுகிறது.
  • துளசி பால் தொண்டையை சுத்தம் செய்வதோடு, இருமல், தொண்டைப் புண், சாதாரண சளி போன்றவற்றை சரிசெய்து, சுவாச மண்டலத்தில் உள்ள அடைப்புக்களை நீக்கும்.
  • ஆஸ்துமா நோயாளிகள் தினமும் ஒரு டம்ளர் துளசி பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
  • மூளைக்கு ஓய்வு கிடைக்க ஒரு டம்ளர் வெதுவெதுப்பான துளசி பாலைக் குடிப்பது, நன்றாக உணர வைக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் அடையச் செய்து, கார்டிசோல் அளவைக் குறைத்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது.
  • ஒரு டம்ளர் வெதுவெதுப்பான துளசி பால் குடியுங்கள். இதனால் தலைவலி மெதுவாக குறைவதைக் காணலாம். அதோடு, இந்த பால் ஒற்றைத் தலைவலியில் இருந்தும் விடுபட உதவும்.
  • துளசி மற்றும் பாலில் அத்தியாவசிய சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய்க்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவும்.
  • துளசி பாலில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. இது உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கும். அதோடு சிறுநீரகத்தில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவுகிறது. இது படிப்படியாக சிறுநீரக கற்களைக் கரைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button