மருத்துவ குறிப்பு

மருத்துவர் கூறும் தகவல்கள்! சாக்லேட் சாப்பிட்டா சர்க்கரை நோய் வருமா? அலசுவோம்

பொதுவாக சாக்லெட் என்றாலே பிடிக்காதவர் உலகில் எவருமே இருக்க முடியாது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பண்டமாகும்.

ஆனால் இதை சர்க்கரை நோயாளிகள் மட்டும் தவிர்த்து வருகின்றன. ஏனெனில் சர்க்கரை நோயாளிகளுக்கு சாக்லெட் சாப்பிடலாமா? கூடாதா என சந்தேகம் அவர்களிடையே இருக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கொகோ நல்லது என்று சொல்லப்படுகின்றன.

கொகோ சாக்லெட்டில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால் அது அவ்வளவு தீவிரமான தாக்கத்தை உங்களுடைய ரத்த சர்க்கரை அளவில் ஏற்படுத்துவது கிடையாது.

ஆனால் சாக்லேட் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. ஏனெனில் அதில் உள்ள இயற்கை காரணி ஆனது சர்க்கரை வியாதியை அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும்.

இதில் அதிக அளவு கொழுப்பும் அதேபோல் அதிக நார்ச்சத்தும் கொண்டிருக்கிறது. இவை இரண்டுமே ஜீரண சக்தியைத் தாமதப்படுத்துமாம்.

மில்க் சாக்லெட் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்ட டார்க் சாக்லெட்டுகளில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக உள்ளது. ஆனாலும் அதில் சர்க்கரை சேர்க்கப்பட்டதால் குறைந்த கிளைசெமிக்கும் அதிக சர்க்கரையும் இருக்கும்.

டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாக்லேட் சாப்பிடுகிற பொழுது, அது இன்சுலின் சுரப்பைத் தூண்டும்.

இது உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இவையிரண்டும் உங்களுடைய ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கின்றன.

அதிலும் குறிப்பாக நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் அதே வேளையில் சாக்லேட்டை சேர்த்து சாப்பிட்டால் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரியும் குறைந்து விடும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறைக்கும்.

அதுமட்டுமின்றி டார்க் சாக்லெட்டில் உள்ள ஒருசில காரணியான, அது உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது ,சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது, அதிக பசி எடுப்பதை தடுத்து விடும். எனவே அதிகம் சாப்பிடுவதையும் குறைத்து விடுகிறது. இதனால் ஒரு சிலருக்கு உடல் எடையை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button