Other News

கொந்தளித்த நடிகை ஷிவானி… காரணம் என்ன..? அசிங்கமா இல்லையா!

பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு இரட்டை ரோஜா சீரியலில் நடித்து புகழ் பெற்றார். இன்ஸ்டாகிராமில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அதுவும் முக்கியமாக கொரோனா ஊரடங்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் மில்லியன் கணக்கில் லைக்ஸ் குவிந்தன. எனினும் சிலர் அவரது உடல் மற்றும் வயதை விமர்சித்து  வைத்து அவரை காயப்படுத்தியுள்ளனர்.

இதனை பார்த்த ஷிவானி மனமுடைந்து, அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “என்னை பற்றி மோசமான கமெண்ட் அடிக்கும் சிலருக்கு இதை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய உடைகளை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை இருக்கிறது. எனது குடும்பத்தை பற்றியும், எனது வளர்ப்பு பற்றியும் பேசுபவர்களுக்கு நான் சொல்வது, எனது பெற்றோர் என்னை நல்லபடியாக வளர்த்துள்ளனர்.என்னுடைய தேர்வுகளுக்கு சுதந்திரம் அளித்துள்ளனர். உங்களுக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்கட்டும்” என்று அவள் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button