மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த சில டிப்ஸ்!.

# கர்ப்பகாலத்தில் தோன்றும் வாந்தியை நிறுத்த லவங்கப்பட்டை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் வடிகட்டி அந்தநீரை பருகி வர சரியாகும்.

# எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊற வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாப்பிட்டு வந்தால் குமட்டல் குறையும்.

# காய வைத்த எலுமிச்சை பொடியை வாந்தி வரும் மாதிரி இருக்கும் போது, சூடான நீரில் போட்டு, குடிக்க வேண்டும். இந்த செயலை மயக்கம் வருவது போது இருந்தாலும், குடிக்கலாம்.

 

# கர்ப்பிணிகள் இஞ்சி டீ போட்டு குடிக்கலாம். வெளியே செல்லும் போது சிறு துண்டு இஞ்சியை கொண்டு செல்வது நல்லது.

# கருத்தரித்தப் பெண்களுக்கு நெல்லுப்பொரியை கஞ்சி காய்ச்சி குடித்து வந்தால் வாந்தி நிற்கும்.

# ஏலக்காய்,மிளகு மற்றும் வெற்றிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் வாந்தி நிற்கும்.

# பூண்டுடன், ஓமத்தைப் பொடி செய்து கலந்து சாப்பிட வாந்தி குறையும்.

# ஒரு கப் மூலிகை டீ சாப்பிட்டாலும், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியை தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button