அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சரும நிறத்தை கூட்டும் பேஸ் பேக்

பெண்கள் தங்களின் சரும நிறத்தையும், அழகையும் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்குகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள்..

• பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.

• ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

• மஞ்சளுடன் சிறிது தக்காளி சாற்றினை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதை காணலாம்.

• பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து பின் முகத்தை கழுவி விட வேண்டும். இது முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தை பிரகாசமாக்கும்.

• வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும். இதனை வாரம் 3 முறை செய்து வந்தால் நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button