9da0ec
மருத்துவ குறிப்பு

ஆயுர்வேத தீர்வுகள்! உயிரை மறைமுகமாக எடுக்கும் மஞ்சள் காமாலை!

மறைமுகமாக மனிதனின் உயிரையே கொள்ளகூடிய நோய்களில் ஒன்றுதான் மஞ்சள் காமாலை நோயும் ஒன்றாகும்.

ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்றால் அவர்களுக்கு வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.

கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும். இரத்த பரிசோதனைகள் மூலம் மஞ்சள் காமாலை தங்களுக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை மேற்கொள்ளவேண்டியது, மிகவும் அவசியம். இல்லையெனில் மனிதனின் உயிருக்கே பேர் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

தங்களுக்கு மஞ்சள் காமாலை உள்ளது என உறுதிசெய்யப்பட்டால் நிச்சயமாக உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

அந்தவகையில் மஞ்சள் காமாலை குணப்படுத்தக்கூடிய சில ஆயுர்வேத வீட்டு வைத்தியங்களும் உள்ளன. தற்போது அவை தெரிந்து கொள்வோம்.

  • அதிகளவு எலுமிச்சை சாறு குடிக்கவும். மஞ்சள் காமாலைக்கு இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். ஒரு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை தேனில் கலந்து சாப்பிடவும். எலுமிச்சை சாறு மற்றும் கரும்பு சாறு கலவையை குடிக்கவும். இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள்.
  •   பீட்ரூட் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் குறுகிய காலத்தில் மஞ்சள் காமாலை குணமாகும். தினமும் ஒரு பவுண்டு முள்ளங்கி சாற்றை குடிக்கவும். கசப்பான சாறு குடிப்பது மஞ்சள் காமாலை குணப்படுத்த உதவுகிறது.
  •   தக்காளி சாறு செய்து சுவைக்கு சிறிது உப்பு சேர்க்கவும். மஞ்சள் காமாலை போக்க இந்த சாற்றை தினமும் குடிக்கவும். புதினா, புதிய எலுமிச்சைமற்றும் இஞ்சி சாறு கலவையை குடிக்கவும். ஒரு சிட்டிகை கருப்பு மிளகுடன் ஒரு கிளாஸ் மோரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடிக்கவும்.
  •    நீங்கள் ஒரு டீஸ்பூன் வறுத்த பார்லி தூள் மற்றும் தேனை ஒரு கிளாஸ் தண்ணீருடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடலாம். ஒரு கிளாஸ் முள்ளங்கி சாற்றில் துளசி இலைகளின் 1 தேக்கரண்டி பேஸ்ட் சேர்க்கவும். இந்த சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை 15-20 நாட்களுக்கு குடிக்கவும்.
  •  கீழாநெல்லி ஒரு கையளவு, சீரகம் ஒரு ஸ்பூன் இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
  •  சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
  •  வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
  •  நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
  • ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
  •   சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
  • சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! கோழைச்சளியை வெளியேற்றும் சித்தரத்தை.

nathan

உங்களுக்கு தெரியுமா துளசிச் செடியால் ஏற்படும் எதிர்பாராத 6 பக்க விளைவுகள்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிற்று வலிக்கான சில வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

பல் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… முப்பது வயதில் கர்ப்பமாக இருபது வயதிலேயே இதை எல்லாம் செய்ய வேண்டும்

nathan

தெரிஞ்சிக்கங்க… இதய நோய்க்கான சில ஹோமியோபதி தீர்வுகள்!

nathan

கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்,pregnancy tips

nathan

ஈறு முதல் இதயம் வரை… நலம் பல தரும் அர்ஜூனா!

nathan

குழந்தைகளின் முன்னே பெற்றோர் செய்யக் கூடாத விஷயங்கள்!!

nathan