28.6 C
Chennai
Friday, May 17, 2024
pi
மருத்துவ குறிப்பு

அடிக்கடி டர்ர்..புர்ர்..ன்னு விடுறவங்களா நீங்க? உங்களுக்குதான் இந்த விஷயம்…

ஏப்பம் மற்றும் வாய்வுத் தொல்லை ஏற்படுவதற்கு காற்றினை விழுங்குவது மற்றும் உணவுத்துகள்கள் சரியாக உடையாதது தான் முக்கிய காரணம். உங்களுக்கு தினமும் வாய்வுத் தொல்லை ஏற்பட்டாலோ அல்லது வாய்வினால் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இருப்பினும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் வாய்வுத் தொல்லை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

 

முக்கியமாக வாய்வுத் தொல்லை ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் பழக்கவழக்கங்கள் தான். அந்த பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், நிச்சயம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். சரி, இப்போது வாய்வுத் தொல்லை ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

சூயிங் கம் வேண்டாம்

நிறைய மக்களுக்கு எப்போதும் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டே பேசும் பழக்கம் உள்ளது. இப்படி சூயிங் கம்மை மென்று கொண்டே இருந்தால், வாயின் வழியாக உடலினுள் காற்று புகுந்துவிடும். இதனால் வயிற்றில் வாயு அதிகம் சேர்ந்து அடிக்கடி இடத்தை நாற வைக்க வேண்டிவரும்.

பால் பொருட்களில் கவனம் தேவை

பால் பொருட்களை எப்போதும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால், அதுவே வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். அதிலும் தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் அதிக அளவு வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.

மூலிகை தேநீர்

வாய்வுத் தொல்லை அதிகம் இருந்தால், மூலிகைத் தேநீரை குடியுங்கள். இது வாய்வுத் தொல்லையில் இருந்து நிவாரணம் தரும். அதிலும் இஞ்சி, பட்டை போன்றவை சேர்க்ப்பட்ட தேநீரைப் பருகினால், செரிமான பாதையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, செரிமானம் சீராக நடைபெற்று, வாய்வுத் தொல்லை ஏற்படாமல் தடுக்கும்.

வேகமாக சாப்பிடாதீர்கள்

சிலர் உணவை தட்டில் வைத்த 2 நிமிடத்தில் தட்டை காலி செய்துவிடுவார்கள். இப்படி வேகமாக சாப்பிட்டால், உணவை வேகமாக விழுங்கும் போது காற்றையும் அதிக அளவில் உள்ளிழுக்க நேரிட்டு, வாய்வுத் தொல்லை ஏற்படும். ஆகவே உணவை உட்கொள்ளும் போது, உண்ணும் உணவை ரசித்து மெதுவாக உட்கொள்ள வேண்டும்.

கொழுப்புள்ள உணவுகள்

கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், செரிமானம் மெதுவாக நடைபெற்று, உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகும். இப்படி நீண்ட நேரம் ஆவதால், வயிற்றில் வாய்வுத் தொல்லையும் அதிகரிக்கும். ஆகவே வாய்வு தொல்லையைத் தடுக்க, கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

வாய்வுத் தொல்லையை உண்டாக்கும் உணவுகள்

உருளைக்கிழங்கு, பீன்ஸ், பருப்புகள், முள்ளங்கி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்தால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட்டர் பானங்களை குடிக்கும் போது, அவை கார்பன்டைஆக்ஸைடை வெளியேற்றி, அது வயிற்றில் செல்லும் போது வாயுவாக மாறும். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், வாய்வுத் தொல்லை ஏற்படுவதோடு, இன்னும் தீவிரமான சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்

புகைப்பிடிக்கும் போது, புகையை உள்ளிழுப்பதால், புகைப்பிடிப்போருக்கு வாய்வுத் தொல்லை அதிக அளவில் இருக்கும். மேலும் இத்தகையவர்களுக்கு வயிறு உப்புசமாக இருக்கும். ஆகவே புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உணவுக்கு முன் நீர்

ஒவ்வொரு முறை உணவு உண்ணும் முன்பும், குறைந்தது 1 கப் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், செரிமான பாதையில் எவ்வித இடையூறும் இல்லாமல் உணவு சென்று செரிமானமடையும். இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுவது குறையும்.

பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம்

நம் முன்னோர்கள் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்வார்கள். காரணமின்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் சாப்பிடும் போது பேசுவதால், உணவுடன் சேர்ந்து காற்றும் வயிற்றினுள் செல்கிறது. இதனால் வாய்வுத் தொல்லை ஏற்படுகிறது. ஆகவே பேசிக்கொண்டே சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

Related posts

வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்

nathan

அரிப்பு ஏற்படுவது ஏன்?

nathan

உங்களுக்கு தெரியுமா பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

nathan

உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால், உடனே குடிப்பதை நிறுத்துங்கள்.!

nathan

கர்ப்பப்பை புற்றுநோயின் தாக்கம்

nathan

இயற்கையின் கொடை இன்சுலின் செடி!

nathan

அதிகாலையில் முகம் வீங்குகிறதா? இதோ தீர்வு

nathan

கண்கள் வறட்சி அடைவதற்கான காரணங்களும்.. அதற்கான சிகிச்சைகளும்..தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan