Other News

தங்கத்தை விழுங்கி பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்திய கொள்ளையன்!! மீட்பதற்கு நடவடிக்கை

கம்பஹா, ஒற்றோட்ட வீதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை திருடி விழுங்கிய நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. விசாரணையின் போது அதனை அந்த நபர் விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணிடம் தங்க நகைகளை திருட முயன்றனர். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை சுற்றி வளைத்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இந்த நிலையில், நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாகல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுர கமகேவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்து நகைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button