18-கேரட் தங்கக் கழிப்பறைத் தொட்டித் திருட்டு
செப்டம்பர் 14, 2019 அன்று, இங்கிலாந்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 18K தங்க கழிப்பறை கிண்ணம் திருடப்பட்டது.
ப்ளென்ஹெய்ம் ஹவுஸில் இருந்து ஒரு தொட்டியைத் திருடியதாக நான்கு பேரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது: 38 வயதான மைக்கேல் ஜோன்ஸ், 39 வயதான ஜேம்ஸ் ஷீன், 35 வயதான ஃப்ரெட் டோ மற்றும் 39 வயதான போரா குச்சுக்.
இந்த வழக்கு இம்மாதம் 28ஆம் தேதி (நவம்பர் 2023) விசாரணைக்கு வருகிறது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]“அமெரிக்கா” என்று அழைக்கப்படும் தொட்டி, பிளீனம் மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
பிபிசியின் அறிக்கையின்படி, கண்காட்சிக்கு வருபவர்கள் வழக்கமான கழிப்பறையைப் போலவே தொட்டியையும் பயன்படுத்த முடியும்.
சேவையைப் பயன்படுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்காமல் இருக்க, மூன்று நிமிட நேர வரம்பு அமைக்கப்பட்டுள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்ட இரண்டே நாளில் அந்தத் தொட்டி களவாடப்பட்டது.
இந்த தொட்டியின் மதிப்பு சுமார் $6 மில்லியன் என்று பிபிசி தெரிவித்துள்ளது.