கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி உதிர்வதை தடுக்க & தலைக் கூந்தலின் முடி வளர்ச்சியை அதிகரிக்க”

முடி உதிர்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. பல ஆண்களும் இன்று வலுக்கு தலையுடனே வலம் வருகிறார்கள். காலம் கடந்த பின் சூரியன் நமஷ்காரமா என்று அவர்கள் கண்டு கொளவதுமில்லை.Dark-haired woman being sad, because of having problems with hair loss

ஏன் இந்த முடி உதிரும் பிரச்சனையை முன்கூட்டியே சரி செய்ய முடியாதா ? என்றால் கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு சற்று நேரம் ஒதுக்கி நம் முடியை பேனிக்காக்க வேண்டும். இவ்வாறு, தன் முடிக்காகவும், முக அழகிற்காகவும் இளம் பெண்கள் சற்று அதிகமாகவே நேரத்தை ஒதுக்கிறார்கள். ஆனாலும், உதிரும் மயிர்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்று, வித விதமான எண்ணெய்களை உபயோகிப்பார்கள். அதிலும் , விளம்பரத்தில் வரும் பொருட்களுக்கே முன்னுரிமையும் வழங்குவர். ஆண்கள், ஆனால் அப்படி அதிகப்படியான நேரத்தை தன் முடிக்கு / தலைக்கு ஒதுக்குவதும் இல்லை, தடுக்க வழிமுறையும் தேடுவதும் இல்லை. பின்னர், அதிகப்படியான முடிகள் தன் தலையில் இல்லை என்ற பின்னரே ஒடுவர் என்ன செய்வதென்று.

முடி உதிர்வது என்பது ஒர் பரம்பரை வியாதியும் கூட. இதை நாம், நம் ஊரில் உள்ள ஒரு சில குடும்பத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தாத்தாவும் வலுக்கு , அப்பனுக்கும் வலுக்கு , இன்று பயனுக்கு பாதி முடிய காணல …

ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது, பெரும்பாலும் உச்சம் தலை வலுக்கு அல்லது முன் தலை வலுக்காக சென்று முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி வலுக்கு தலை அளவிற்கு செல்வது இல்லை, குறைந்து கொஞ்சமாக இருக்கும் (அதைப் பார்த்து ஒர் நல்ல வார்த்தை சொல்லுவாங்க-**)…. சிலர் வெளிப்பார்வையை தடுக்க சவரி முடியைக் கொண்டு கொண்டை போட்டுக் கொள்வர்.
ஆனால் , ஆண்கள் ஆங்கில மருத்துவப்படி தன் தலைகளில் செயற்கை முடிகளை நட்டிக் கொள்கின்றனர். டோப்பாவும் சிலர் பயன் படுத்தி வருகின்றனர் என்றாலும் பெரும்பான்மையானவர் செலவற்ற தொப்பியையே பயன் படுத்தி வருகிறார்கள்.

ஒரு பெண்ணின் அழகை மேலும் கூட்ட இம்முடியும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது. அப்படி இரு பாலருக்கும் முக்கியாமான அழகுக் காரணியாய் அமைந்த முடியை இழக்காமல் தடுக்க என்ன செய்யலாம்….

ஆங்கில மருத்துவ முறையில் பல மருந்துகள் வந்தாலும் அதை நம் பெண்கள் விரும்புவதில்லை. பெர்ம்பான்மையானவர் நமது தமிழ் இயற்கை சித்த வைத்திய முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.

முடி உதிர்வது என்பது ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படிகிறது என்றாலும் அதனை முழுவதுமாக தடுக்க சரியான ஆங்கில மருந்து இன்றளவும் இல்லை.

இங்கே சில சித்த மருத்துவ குறிப்புகளை உங்களின் தலைக் கூந்தல் முடி உதிர்வதனை மெல்ல தடுத்து வளர்க்க எழுதுகிறேன்:

1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.

2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.

3. வழுக்கைத் தலையில் முடி வளர : கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.

4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.

5. முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button